தமிழகத்தில் துவைதத்தின் தாக்கம், விஜியேந்திரர்–ராகவேந்திரர் போன்றோர் சைவ–வைணவ பேதத்தை போக்க ஆற்றிய தொண்டு முதலியன [1]
இடைக்காலத்தில் தமிழகத்தில் இருந்த இக்கட்டான நிலை: சோழர்களின் மறைவுக்குப் பின்னர், பாண்டியர்களின் ஆட்சி-அதிகாரம் வலுவில்லாமல் போனதால், துலுக்கரின் படையெடுப்பு, தென்னிந்தியாவின் பக்கம் திரும்பியது:
- 1310-11களில், தமிழகம் துலுக்கரின் படையெடுப்பு, கோவில்கள் இடிப்பு, செல்வத்தை கொள்ளையெடித்தல் போன்றவற்றை மாலிகாபூரின் வரவிலிருந்து அறிந்து கொண்டனர்.
- வீரவல்லாளன் (1291-1348) தமிழகத்தைக் காக்க அந்நியரை எதிர்த்து வீரமரணம் எண்பதாவது வயதில் எய்திய மாபெரும் வீரன். கியாசுத்தீன், அவரைக் கொன்று, உடலில் வைக்கோல் அடைக்கப்பட்டு, மதுரை கோட்டையின் மதிற்சுவற்றின் சுவரிலிருந்து தொங்கவிடப்பட்டது.
- 1335-1378 வரை மதுரையில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. பல கோவில்கள் ஆக்கிரமிக்கப் பட்டன.
அதாவது வீரவல்லாளனை இன்றைக்கு “கன்னடக்காரன்” என்று தமிழ் சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஒதுக்கலாம், மறைக்கலாம், ஆனால், அவன் தான் துலுக்கரை, துணுங்கரை முறையாக எதிர்த்து 80 வயது வரை போராடியுள்ளார். அதேபோல விஜயநகர அரசர் ராமராயர் 1565ல் தலைக் கோட்டைப் போரில் வீழ்ந்தபோது வயது 90. உண்மையில் இவர்கள் தான் இது மதத்திற்காக முதுமையிலும் போராடி வீரமரணம் எய்திய வீரர்கள், தியாகிகள் ஆவார்கள்[1]. அந்நிலையில், கோவில் புனரமைப்பு, பாதுகாப்பு, போன்றவை மடகுருக்களுக்கு, மடாதிபதிகளுக்கு, நம்பிக்கையாளர்களுக்கு தலையான கடனாகியது, கடமையாகியது. இதில் விஜயநகர, நாயக்க மன்னர்கள் மிகப்பெரிய தொண்டினை ஆற்றியுள்ளனர். ஆனால், மதம் மாறிய ஜைன-பௌத்தர்களின் ஊடுருவல் சித்தாந்தங்கள், இந்துக்களைக் குழப்பியிருந்தது. தேவையில்லாத சைவ-வைணவ வாத-விவாதங்கள் மூலம் திரிபுகளை உண்டாக்கி, நம்பிக்கையாளர்களைப் பிரித்துக் கொண்டிருந்தன.
மாற்று மதங்களின் தாக்கங்களில் துவைதம் முக்கியத்துவம் பெற்றது: ஒரு நிலையில் சிவன் பெரிய கடவுளா, விஷ்ணு பெரிய கடவுளா, என்ற நிலைக்கு வந்தது. மத்வாச்சாரியார் தென்னிந்திய விஜத்தின் போது, எப்படி அவர் தூஷிக்கப் பட்டார், நூல்கள் பறிமுதல் செய்யப் பட்டன போன்ற விவரங்கள் திகைப்படையச் செய்கின்றன[2]. சிருங்கேரி மடம் அதில் சம்பந்தப் பட்டது, அதற்கும் மேலான ஆச்சரியம் தான். அந்நிலையில் ராமானுஜர் (1017-1137)-மத்வர் (1238-1317 / 1199-1278) போன்றோரின் வாதங்கள் மக்களின் மீது தாக்கம் இருந்தது. பசவரும் (1105-1167) அதே காலத்தில், வீரசைவம் மூலம், ஜைனர்களின் தாக்கத்தை அடக்கினார். கர்நாடகாவில் ராமானுஜர்[3], பசவர் இருந்திருததால், சந்தித்தனரா என்று தெரியவில்லை. ராமானுஜர் 1078 முதல் 1090 வரை மேலுகோடாவில் இருந்தால், பசவர் தனது 27 முதல் 39 வரை வயதினில், நிச்சயம் பார்த்திருப்பார். அந்நிலையில் தான், இந்துக்களை ஒன்று படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தத்துவம் கூட மக்களை இணைக்க உபயோகப் படுத்த வேண்டும். அபாய காலத்தில் வீரத்துடன் எழுந்து போராடி காத்துக் கொள்ள வேண்டும், மற்றவர்களையும் காக்க வேண்டும், அந்நிலையில் கடவுள் எல்லோரிடத்திலும் இருக்கிறார், கடவுள் தான் வந்து கோவிலை இடிக்கிறார், விக்கிரங்களை உடைக்கிறார்,…..என்றெல்லாம் நினைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது[4]. அந்நிலையில் தான், அவன் வேறு, அதனால் தான் அவன் அவ்வாறு செய்கிறான், அதனால், அவனை எதிர்த்துப் போராட வேண்டும் என்று “அத்வைதம்” மற்றும் “விசிஸ்டா-துவைதம்” போதிக்க வேண்டிய அவசியம் உண்டானது.
மத்வாச்சாரியார் காலம் (1238-1317 / 1199-1278)[5]: மத்வாச்சாரியார் உடுப்பியில் மடத்தை ஏற்படுத்தி, துவைத சித்தாந்தத்தைப் பரப்பினார்[6]. இவரது சீடர்களான – பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், மாதவ தீர்த்தர், அக்ஷோப்ய தீர்த்தர், ஜெய தீர்த்தர், வித்யாதி தீர்த்தர் முதலியோர், பாரதத்தின் பல பகுதிகளில் துவைத சித்தாந்தத்தைப் பரப்பினர். உத்திராதி மடம், வியாசராய மரடம் மற்றும் சுசீந்திர மடம் என்றாகியபோது[7], விஜயீந்திர தீர்த்தர் (1514-1595), வியாசராயர் சீடர்களில் ஒருவர், மற்றவர் – புரந்தரதாசர் (1484-1564), கனகதாசர் (1509-1609), வாதிராஜர் (c.1480-1560). இவர்கள் எல்லோரும், ஜாதி முதலியவற்றைப் பாராமல், பக்தி என்ற முறையில் கீர்த்தனைகளைப் பாடி, மக்களை இணைத்தனர். உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.
மத்வாச்சாரியார், சைவத்தை அனுசரித்து, ஆதரித்துச் சென்றது: குறிப்பாக, மத்வாச்சாரியார், சிவனை உயர்வாக மதித்தார். சிவல்லி சைவம் பின்பற்றிய சமூகத்தில் பிறந்ததால், தனது சிறு வயதில் சிவலிங்கத்தை வணங்கி வந்தார். தன்னுடைய எழுத்துகளில், எங்குமே சிவனைப் பற்றி வெறுப்பு உண்டாக்கும்விதமான விவரங்கள் இல்லை[8]. கர்நாடகாவில் சிவன் கோவில்கள் அதிகம் ஏன், உடுப்பி மடம் வளாகத்திலேயே சிவன் கோவில்கள் உள்ளன. இதனால், விஷ்ணுலிங்கம், சிவலிங்கம் என்றும் உபயோகத்தில் இருந்தன[9]. ஆனால், அவை அப்படியே பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன. சைவர் விஷ்ணுமற்றும் பிரம்மாவை லிங்கத்தின் அடிமுடி தேடிச் சொல்லும் கதைகளைப் புனைந்து, சைவ-வைணவர்களைப் பிரிக்கும் காலத்தில், இவர் இத்தகைய ஒற்றுமையை உணர்த்தினார். தெற்கு நோக்கி, தக்ஷிணாமூர்த்திக்கு பதிலாக, லிங்கோத்பவர் வைக்கும் முறையும் சைவ-வைணவர்களைப் பிரிக்கும் திட்டம் தான். பிறகு லிங்கத்திலேயே பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரன் பாகங்கள் உள்ளன என்று விளக்கம் அளிக்கப் பட்டது. இதுதான், மத்வர், மத்வ சம்பிரதாயம் முதலியவற்றின் சிறப்பு அம்சம். அதனால் தான், விஜியேந்திரர் காலத்தில், கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்கள் எல்லாம் சிறப்பாக நிர்வகிக்கப் பட்டன. மத்வருடைய அணுகுமுறையை, ஐரோப்பியர், கிருத்துவ மிஷினரிகள் மற்றும் சூபி போர்வையில், சிலர், இவர் கிருத்துவ மற்றும் இஸ்லாம் மதங்களினால் ஈர்க்கப் பட்டார் என்றெல்லாம் எழுதினர். ஆனால், அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று எடுத்துக் காட்டப் பட்டது. அவர்களுக்கு அதே வேலை என்பதால், அத்தகையவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை.
© வேதபிரகாஷ்
04-07-2020
[1] இவர்களைப் பற்றியும் முறையாக, தமிழ் சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் எழுதுவதில்லை. ஒருவேளை “செக்யூலரிஸமாக” இருந்து கொள்ள வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
[2] C. N. Krishnamurthy Iyer and S. Subba Rao, Sri Madhwacharya – a Skketch of his life and times and his philosophical system, G. A. Natesan & Co., Madtas, Chapter-V, pp.43-51.
[3] இராமானுசர் சோழ மன்னனின் கோபத்திலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கர்நாடக மாநிலத்தில், மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள மேல்கோட்டை என்றழைக்கப்படும் திருநாராயணபுரம் என்ற ஊரில் அமைந்த திருநாராயணன் கோவிலுக்குச் சென்று அங்கு 12 ஆண்டுகள் தங்கியிருந்தார்.
[4] சூபித்துவம் போர்வையில், நிறைய சரித்திராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் முதலியோர் அத்தகைய திரிபு விளக்கங்களை அளித்துள்ளனர். இன்னும் சொல்லப் போனால், கோவில்களில் தங்கம் இருந்ததால் தான் கொள்ளை அடித்தார்கள் என்று ரோமிலா தாபர் போன்றோர் திரித்து எழுதியுள்ளனர். உருவவழிபாடு கூடாது என்றாதால் தான் அவர்கள், விக்கிரங்களை எல்லாம் உடைத்தச்ர்கள் என்று முஸ்லிம்களில் விளக்கமும் உண்டு. அதாவது உண்மையினை மறாஇக்க, இவ்வாறு ஒன்று சேர்ந்து கொண்டுள்ளனர் என்றுதான் கொள்ள வேண்டியுள்ளது.
[5] C.M. Padmanabha Char, The Life And Teachings of Sri Madhvacharyar, The Progressive Press, Madras, 1909. About the date, see. Chapter-III, pp.25-33.
[6] Alur Venkat Rao, A Hand Book Of Madhwacharya Poorna Brahma Phisolophy, Navajeevan Grantha Bhandar, Sadankeri, Dharwar, 1954.
[7] C. N. Krishnamurthy Iyer and S. Subba Rao, Sri Madhwacharya – a Sketch of his life and times and his philosophical system, G. A. Natesan & Co., Madtas, p.40.
[8] Sri Madhva’s attitude towards Siva is very differerent. He found that Siva was the popular deity of the country He was probably born a Shivalli Saivite himself. He found South Canara in particular full of temples where the Lingam was the idol of worship, and Bootastans, invariable adjuncts thereof. In the Ananteswara, Chandramouleswara, Kanana Devata, Veda Bandeswara temples, where he often worshipped in his youth, it is the Lingam that forms the image, though some of these Lingams are considered to be representations of Vishnu and not of Siva. In Sri Madhva’s system, Siva occupies one of the highest ranks, he being placed next to the Four-faced Brahma, Vayu, and their consorts. Madhwas freely visit the temple of Siva, and worship this deity. There is not the least trace of rancour m any references or allusions to this deity in Madhva writings.
C.M. Padmanabha Char, The Life And Teachings of Sri Madhvacharyar, The Progressive Press, Madras, 1909, p.158.
[9] C.M. Padmanabha Char, opt.cit, p.12.