ஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின் 109–ம் ஆண்டு ஆராதனை விழா நெரூரில் நடந்தது!
109-ம் ஆண்டு ஆராதனை விழா நெரூரில் நடந்தது: நெரூர் சதாசிவ பிரமேந்திராள் 109-ம் ஆண்டு ஆராதனை விழா கடந்த 25-ந்தேதி தொடங்கியது. 30-04-2023 தசமி அன்று ஆராதனை முடிவு பெற்றது. கொரோனா காலத்திற்குப் பிறகு கூட்டம் குறைந்து விட்டது. 30-ந் தேதி ஆனந்த வல்லி அம்மன் கோவிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதியில் பூஜை, விருத்தி, குரு உஞ்சவ் விருத்தி, அஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேசுவர பூஜை, வடுக பூஜை உள்ளிட்டவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர். 109-ம் ஆண்டு ஆராதனை விழா – இதனையொட்டி தினமும் உஞ்ச விருத்தி, கிராம பிரதட்சினம், லட்சார்ச்சனை, வேதபாராயணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன[1]. இதனைத்தொடர்ந்து நேற்று ஆராதனை விழாவையொட்டி சதாசிவ பிரமேந்திரநாள் சரஸ்வதி சுவாமிகளின் ஆராதனை உற்சவமும், லட்சார்ச்சனை, தெய்வீக பேரூரைகள், திவ்யநாம சங்கீர்த்தனை, பஜனை ஆகியவைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்[2].
கூட்டம் குறைந்து வருவது வருத்தமாக இருக்கிறது: கொரோனா காரணங்களால் 2020-2023 ஆண்டுகளில் கூட்டம் குறைவானது. முன்னர், “உருளல்” இல்லை என்ற போதே ஆயிரக்கணக்கான கூட்டம், நூற்றளவில் குறைந்து விட்டது. இப்பொழுது, தவறாமல் வரவேண்டும் என்ற வேண்டுதல், உறுதி இருப்பவர்கள், வருகிறவர்கள் மட்டும் விடாமல் வந்து செல்கின்றனர். கரூர் ராமகிருஷ்ணன் 03.02.2022 அன்று காலமானப் பிறகு, அவரது நண்பர்கள் வருவதும் குறைந்து விட்டது. நண்பர்களிடையே ஏதோ ஒன்று போய் விட்டது அல்லது குறைந்து விட்டது போன்ற உணர்ச்சி / எண்ணமும் தோன்றுகிறது. குறிப்பிட்ட நண்பர்கள் வருவர், இரவு முழுவதும் தத்துவம், ஆன்மீகம் போன்ற விசயங்கள் பேசிக் கொண்டிருப்பர். மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் இருக்கும் பொழுது, அவரவர் அனுபவங்கள் பரிமாறிக் கொள்ளப் படும். முன்பெல்லாம், 100-200 பேர் அவரது வள்ளலார் சபையில் வந்து தங்குவர். கூட்டம் அந்த அளவுக்கு இருக்கும். அதாவது, மற்ற இடங்களில் தங்க இடமில்லை என்ற நிலையில், இங்கு வந்து தங்குவர்.
விருப்பங்கள் தேவைகள் மாறுகின்றன: இப்பொழுது அந்த கூட்டத்தைக் காணமுடியவில்லை. எல்லா நாளிதழ்களும் சிறப்பு பிரதியைக் கொண்டு வரும். அதற்கு கரூர் சுற்றியுள்ள வியாபாரிகள் விளம்பரம் கொடுப்பர். கரூர்-நெரூர் பேரூந்துகள் சென்று கொண்டே இருக்கும். இப்பொழுது, எல்லாமே குறைந்து விட்டது. ஆனால், அரைத்த மாவை அரைத்து, எல்லாம் தெரிந்தது போல, யூ-டியூப்புகள் மட்டும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. இப்பொழுதெல்லாம் இணைதளத் திருட்டு சர்வசகஜமாகி விட்டது. ஒருவர் கஷ்டப் பட்டு, எல்லா விவரங்களையும் சேகரித்து, இணைதளத்தில் பதிவு செய்தால், சில நிமிடங்களில் அதை “கட்-அன்ட்-பேஸ்ட்” செய்து தமது போல போட்டுக் கொள்வர். பணம், வசதி, முதலியவை உள்ளவர்கள், எல்லாவற்றையும் தொகுத்து புத்தகமாகவும் போட்டு விடுவர். ஆனால், பக்தியுடன் அங்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைவது வருத்தமாகவே இருக்கிறது. இவ்வருடம் 2023ல் அக்ராஹார கால்வாயில் காவிரி நீர் ஓடிக் கொண்டிருந்தது. வழக்கமான நிகழ்ச்சிகளுடம் நடந்து கொண்டிருந்தன.
அக்ரஹார மடத்தின் வாசல்
கோலங்களுடன் தயாராகும் ஆராதனை விழா…
வழக்கம் போல திருவுருவப் படம் எடுத்துச் செல்லப் படுகிறது…..
ஆராதனை – இசை மூலம் சமர்ப்பணம்……
இம்முறை ஒரு பெண்மணி தவில் வாசித்தார்…
மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா தொடங்கியது. ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்தனர். மானாமதுரை சிவகங்கை மாவட்டம் மானசசஞ்சரே எனபாடி இறைவன் அம்பிகையை எந்த நேரமும் வழிபாடு செய்து ஆண்-பெண் தோற்றத்துடன் கூடிய மகான் சதசிவ பிரம்மேந்திராள். இவரது ஜீவசமாதி கரூர் அருகே நெரூரிலும், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலிலும் உள்ளது. இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. ஆண்டு தோறும் சதாசிவ பிரம்மேந்திராள் இசைஆராதனை விழா மானாமதுரையில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா இன்று காலை தொடங்கியது[3]. இதில் இந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசை கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தனர்[4]. கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் நினைவை போற்றும் வகையில் இந்த விழா நடைபெற்றது. முதல் நாள் விழா மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மகாலில் காலை முதல் வேதபாராயணம், உஞ்சவ்விருத்தி, தீபாராதனை மற்றும் வாய்ப்பாட்டு, பூஜைகள், புல்லாங்குழல், பாட்டு நடந்தது. வீணை, வயலின் போன்ற இசை கச்சேரிகளை கர்நாடக இசைக் கலைஞர்கள் நடத்தினர். மாலையில் இசைக் கலைஞர்களுக்கு ஆராதனை கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
© வேதபிரகாஷ்
01-05-2023
[1] தினத்தந்தி, நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஆராதனை, தினத்தந்தி மே 1, 1:14 am
[2] https://www.dailythanthi.com/News/State/nerur-sadasiva-pramendra-aradhana-954600
[3] மாலை மலர், சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா , By மாலை மலர், 29 ஏப்ரல் 2023 1:19 PM.
[4] https://www.maalaimalar.com/news/district/sivagangai-news-satasiva-brahmendra-aradhana-started-602777?infinitescroll=1