பன்னாட்டு பல்துறை மாநாடு – வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அனைத்துலக சைவம் மற்றும் சைவ சித்தாந்த மாநாடு –சைவம் “தமிழர் சமயம்” ஆகி, சித்தாந்தம் நீர்த்தது! [7]
நீதிபதி பேசியது, சான்றிதழ்கள் கொடுக்கப் பட்டது, மாநாடு முடிந்தது: மாண்புமிகு திரு. நீதிபதி எம். கோவிந்தராஜ் ஜனாதிபதி உரையாற்றுவார் என்றிருந்த்ச்து, ஆனால், அவர் பேசவில்லை. மாண்புமிகு திரு. நீதிபதி கே. கல்யாணசுந்தரம் வாழ்த்துரை வழங்குவார் என்று போடப்பட்டிருந்தது, ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை. மாண்புமிகு திரு. நீதிபதி ஆர். மகாதேவன் மட்டும் சைவ சித்தாந்தத்தைப் பற்றி சுருக்கமாக பேசி முடித்தார். “சமத்துவ சிந்தனையோடு கூடிய சித்தாந்த தத்துவமே சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தத்தின் இறைத்தன்மையில் உண்மையான முழுமையான முக்தி கிடைக்கும். சமூக சிந்தனையோடு சமுதாய வளர்ச்சியிலும் சைவ சித்தாந்தம் செயல்பட்டு தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது,” என்றார். பிறகு, சான்றிதழ்கள் நீதிபதிகளால் விநியோகிக்கப்பட்டன. சிறிது நெரம் கழித்து, அவர்கள் சென்றுவிட்டார்கள், அதனால், இரண்டு மடாதிபதிகளால் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டன.
தமிழர் சமயம் – வாதம் போலித்தனமானது: மு. தெய்வநாயகம், சைவ சித்தாந்தத்தை திரிபுவாதத்திற்கு உட்படுத்தியது, சைவ ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிந்திருக்கும். அந்த திருபுவாதத்தை மறுத்து, அருணை வடிவேலு முதலியாரின் மறுப்பு புத்தகம் வெளியிடப் பட்டது. கத்தோலிக்கர் ஆதரவுடன், “தமிழர் சமயம்” என்ற மாநாட்டை கத்தோலிக்க பிஷப்புகளில் டையோசிஸ் வளாகத்தில் 15-08-2007 முதல் 19-08-2007 வரை நடத்தியது சரவணனுக்கு தெரிந்திருக்கும். இதைப் பற்றிய என்னுடைய விவரமான கட்டுரையை இங்கே படிக்கலாம்[1]. அதன் விளைவுகளைப் பற்றிய கட்டுரையை இங்கே படிக்கலாம்[2]. இதில் வேடிக்கை அல்லது பொருந்திய விசயம் என்னவென்றால், அடுத்த கட்டுரையே, “கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?” என்பது தான்[3]. அதில்தான், மைலம் மடாதிபதி, கோவில் நிலத்தை, கிருத்துவர்களுக்கு விற்ற பிரச்சினை வருகிறது. “சிவாக்கியா பாலய சுவாமி” யார் என்று கவனிக்க வேண்டியுள்ளது. 1971 மற்றும் 2018 தீர்ப்புகளில் அவரது பெயர் இருக்கிறது[4]. நீதிமன்ற ஆவணங்கள் படி சரி பார்த்தால், அவரும், இவரும் ஒருவரே என்று தெரிகிறது[5]. 2018 தீர்ப்பை மாண்புமிகு திரு. நீதிபதி ஆர். மகாதேவன் தான் கொடுத்துள்ளார். மாநாட்டிற்கு, முந்தைய விழாக்களுக்கு வந்துள்ளார். இதெல்லாம் தற்செயலாக நிகழ்ந்தனவா, தெய்வம் தீர்மானித்து, நடத்தி வைத்த நிகழ்வுகளா என்று தெரியவில்லை.
திருக்குறள், சைவ சித்தாந்தம், வேதங்கள்: சரவணன் அன்ட் கம்பெனி, இப்பிரச்சினையையும் எடுத்துள்ளது, மேலும் கேள்விகளை எழுப்புகின்றன. மு.தெய்வநாயகம், தூஷித்த போது, கோழைகளாக பதுங்கியிருந்த இக்கூட்டம், இப்பொழுது, திடீரென்று ஓலமிடுவது ஏன் என்று தெரியவில்லை. குறளா-குரானா என்றெல்லாம் அச்ங்கப் படுத்தியபோதும், இவர்களுக்கு சூடு-சொரணை எதுவும் இல்லாமல் இருந்தது போலும். ஆனால், இப்பொழுது, வரிந் து கட்டிக் கொண்டு வந்துள்ளது, இவர்கள் உண்மையிலேயே, யாருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர், என்ற கேள்வி எழுகின்றது. ஒரு பக்கம், சைவம் இந்து அல்ல என்பது; சித்தாடந்தம் தனி வழி என்பது; பிரிவினைவாதிகளுடன் கூட்டு வைத்துக் கொள்வது; பிறகு, குறளுக்கும் வேதங்களுக்கும் தொடர்பு என்றால் குதிப்பது…இவையெல்லாம் ஏன், எப்படி, எவ்வாறு, எதற்காக? சரவணன் அன்ட் கம்பெனி நேரிடையாக பதில் சொல்ல முடியுமா? அருணை வடிவேலு முதலியார் புத்தகம் இருட்டடிக்கும் ரகசியம் இதுதானா?
எஸ். சரவணனின் நிலைப்பாடு என்ன?: ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்புகள் பெயர்களை சொல்லி, விளம்பரம் தேடுவதும் தெரிகிறது. ஏனெனில், அவர்கள் சைவர்களுக்கு விரோதமானவர் அல்ல. இம்மாநாட்டில் பேசிதைப் போல, ஏசு சித்தர், என்௷றெல்லாம் உளர மாட்டார்கள். எனவே இளங்கோ மற்றும் சரவணன் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். விபூதி பூசிக் கொண்டு, ருத்ராக்ஷம் கட்டி, சிவன் கோவில்களில் தத்துவம் பேசி, மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. சரவணனின் பேச்செல்லாம் சைவத்திற்கு எதிராக உள்ளவை தான். 200-300 பேரை வேண்டுமானால், அவர் ஏமாற்றி காலத்தை ஓட்டலாம். ஆனால், முடிவில் உண்மை தெரியத்தான் போகிறது. ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள் இவற்றையெல்லாம் ஒதுக்கி, பாரம்பரிய சைவனாக, சைவ சித்தாந்தியாக இருந்து பார்த்தாலே, இவர் மற்றும் இவருக்கு பின்னால் இருக்கும் கூட்டம், மாபெரும் சைவ தூஷணத்தை செய்து வருகிறது என்பதை அறிந்து கொள்வர். யாழ்பாணம் ஆறுமுக நாவலர் போன்றோர் இருந்திருந்தால், வள்ளலாரை கேள்வி கேட்டது போல கேட்டிருப்பார். ஒருவேளை தெய்வநாயகம் படுத்து விட்டதால், இவர் எழுந்து, அந்த வேளையை செய்கிறார் போலும். நிச்சயமாக, சிவபெருமான் சும்மா விட மாட்டார்.
முடிவுரை – மாநாட்டைப் பற்றிய கருத்துகள்: பால்வரை தெய்வம் நல்வினை தீயவினைகளை வகுக்குந் தெய்வமா, பிரிக்கும் கடவுளா, நம்பிக்கையாளர்களைக் குழப்பும் இறைவனா? திரு. அருணைவடிவேலு முதலியார் எழுதிய மறுப்பு நூலை மறைக்க, தருமபுர ஆதீனம் வெளியிட்டதை, “சைவ சித்தாந்த பெருமன்றமே” சதி செய்கின்றது! இப்பொழுதெல்லாம் நிறைய பேர் நான் விவேகானந்த கல்லூரியில் படித்தவன் என்று வேறு மாதிரியாக பேசுவது, சித்தாந்தம் சொல்லி அலைவது என்று ஆரம்பித்துள்ளனர். திராவிட கழக கருணானந்தம் விவேகானந்த கல்லூரியில் படித்தவராம், என்ன பிரயோஜனம்? நல்லூர் சரவணன் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவராம்! இந்த இளங்கோவும் விவேகானந்த கல்லூரியில் பாடம் சொல்லிக் கொடுக்கிறாராம்! இந்தியா நாடல்ல, ஒன்றியம்……..370 எடுத்தது, லடாக்கை உருவாக்கியது…. தவறு என்றெல்லாம் பேசிய விவேகானந்த கல்லூரி ஆசிரியர் – கணபதி இளங்கோ! இதெல்லாம் கூட சைவ சித்தாந்தத்தில் வரும் போல!
சைவ சித்தாந்தப் பெருமன்றம், எண்.7, முதல் மாடி, வேங்கடேச அக்கிரகாரம் சாலை மயிலாப்பூர், சென்னை – 600 004 – இத்தகைய போலி சித்தாந்திகளிடமிருந்து மீட்கப் படவேண்டும்! சாது சண்முக அடிகள், சிவஞான பாலாய சுவாமிகள், சரவணனுக்கு ஆதரவு கொடுப்பதால் அம்மடங்களும் இந்து அல்ல என்று அறிவிக்குமா? சைவம் இந்து அல்ல என்று பழனியில் தீர்மானம் போட்டார்களாமே, எஸ். சரவணன் சொல்கிறார்! இந்துத்துவ வாதிகள், ஒன்றும் சொல்ல காணோமே? சிவனே இல்லாத சைவ சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு, தமிழர் சமயம் என்றால், “இந்துக்கள்” என்ற சான்றிதழ்களை கிழித்துப் போடலாம்! இங்கு – பேஸ் புக்கில், உங்களது வீராப்பு காட்டிக் கொண்டிருந்தால், ஒன்றும் பிரயோஜனம் இல்லை, சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்து கொண்டிருக்கும் சைவம், மற்றும் சைவ சித்தாந்த மாநாட்டில் வந்து காட்ட வேண்டும்.
© வேதபிரகாஷ்
21-08-2019
[1] வேதபிரகாஷ், தமிழர் சமயம்: கிருத்துவர்கள் நடத்திய மாநாடு, 2008, மே.18, 2010, https://christianityindia.wordpress.com/2010/05/18/religion-of-tamils-conference-conducted-to-subvert-hindu-religion/
[2] வேதபிரகாஷ், தமிழர் சமயம் – 2: அதன் பிரச்சினைகளும, விளைவுகளும், மே.18,2010,https://christianityindia.wordpress.com/2010/05/18/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/
[3] வேதபிரகாஷ், கிருத்துவர்கள் செஞ்சியைத் தாக்கும் மர்மம் என்ன?, என்பது தான், 19-05-2010.
[4] Madras High Court, Srila Sri Sivagnana Balaya … vs The State Of Tamil Nadu By The … on 9 March, 1971
Equivalent citations: (1972) 2 MLJ 605, Author: K Palaniswamy, ORDER K.S. Palaniswamy, J.
[5] Madras High Court, Sri Math Sivagnana Balaya … vs The State Of Tamil Nadu on 14 September, 2018; IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 14.09.2018, CORAM, THE HONOURABLE MR. JUSTICE R.MAHADEVAN, W.P.No.23948 of 2018
Sri Math Sivagnana Balaya Swamigal , Thirumadam Thirukailaya Parambarai , Mailam Pommapura Aathenam Mailam,, Tindivanam Taluk, Villupuram District. .. Petitioner Vs
1. The State of Tamil Nadu,
rep. by Principal Revenue Secretary, St. George Fort, Chennai.
|
2.The District Collector,
Kancheepuram District, Kancheepuram.
|
3.The Assistant Settlement Officer (North),
The Commissioner of Survey and Settlement Office, Survey Illam, 3rd Floor, Chepauk, Chennai-5.
|
4.The District Revenue Officer,
Kancheepuram District, Kancheepuram.
|
5.The Tahsildar,
Chengalpattu Taluk, Kancheepuram District.
|
6.The Tahsildar,
Thirukazhukundram Taluk, Kancheepuram District. .. Respondents
|