Archive for the ‘உலக சைவ மாநாடு தீர்மானங்கள்’ Category

உலகமெலாம் பரவியிருந்த லிங்க வழிபாடு.

மே 11, 2010

உலகமெலாம் பரவியிருந்த லிங்க வழிபாடு

கோ. வே. ராமகிருஷ்ண ராவ்

சிவலிங்க வழிபாட்டைப் பற்றி தவறான கருத்துகள் சைனர்கள், பௌத்தர்கள் காலம் தொடங்கி, முகாலயர் காலத்தில் அவதூறாக்கி, ஆங்கிலேயர் காலத்தில் ஆபாசமாக்கி, பிறகு வந்த இந்து-விரோத சித்தாந்திகள் அசிங்கமாக்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

அதனால்தான் பாஷாண்டிகள், கபோதிகள், துணங்கர், துலுக்கர், ………………..என்றெல்லாம் இந்திய மக்களால் இன்றளவும் சொற்பிரயோகத்தில்ல் பல வார்த்தைகள் இருந்து வருகின்றன.

ஆனால், உண்மை அறியாமல் அல்லது மறைத்து இன்றும் அத்தகைய துன்மார்க்க முறையில் எழுதி வருகின்றனர்.

ஆனால் பாவம், இன்றும் உள்ள அத்தாட்சிகள் அவர்களுடைய கொடிய மனங்களை, குரூரச் சிந்தனைகளை, ஆபாச போக்கை……………….வெளிக்காட்டுகின்றன.

இதோ, சமீபத்தில் சிதம்பரத்தில் பிப்ரவரி 5 முதல் 7 வரை 2010ல் நடந்த பன்னிரண்டாவது உலக சைவ மாநாட்டில் ஆய்வாளர் – கோ. வே. ராமகிருஷ்ண ராவ், சென்னை அவர்களால் வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை – “ஆய்வுக்கோவை-தொகுதி-2, பக்கங்கள்.375-386ல் காணலாம்.

வசதிக்காக, இங்கே பதிவிடப்படுறது.

முன்னுரை (அணுகு முறை): மேனாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் முதலியோர் பிறகு சரித்திர ஆசிரியர்களாக மாறி தாம் தத்தமக்கு அறிந்தது, புரிந்தது, தெரிந்தது என்றவற்றையெல்லாம் எழுதி வைத்ததை இந்தியர்கள் படித்து இன்று விவாதிப்பதிலேயே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்[1]. மூலங்களைப் படிக்காமல், உள்ள அத்தாட்சிகளைப் பார்க்காமல், “மற்றவர்கள்” மற்றவர்களைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்களோ, அவையே ஆதாரம் என்று, அதையே உண்மையென்று மற்றும் நிரூபணம் செய்யப்பட்ட முடிவுகள் என்றும் சாதிக்கும் நிலையிலும் அத்தகைய தர்க்கங்கள் உள்ளன[2]. இப்பிரச்சினைகளோடு இனம், மொழி, ஜாதி, நாடு, மதம், அனைத்திற்கும் மேலாக சித்தாந்தம் போன்றவைக் கருத்தை, மனங்களை, சிந்தனையோட்டங்களைக் கட்டுப் படுத்துகின்றபோது செய்துகொள்ளும் சமரசம், உடன்பாடு உண்மைகளை மறைத்துவிடுகின்றன[3].  இத்தகைய நிலையில் மறைக்கப் பட்ட, திரிபுவாதங்களுக்குட்பட்ட லிங்கவழிபாடு ஆராய்ச்சிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உண்மையான லிங்கவழிபாடு எவ்வாறு தனித்துள்ளது என்பது ஆராயப்படுகிறது. முன்பு இதைப்பற்றிய முந்தைய ஆய்வுகளில் விவரங்கள் சிறிதளவேக் காணப்படுகின்றன[4].

குத்துக்கல் – நடுகல் வழிபாடு: தொல்லியல் ரீதியாக பழங்கற்கால (Palaeolithic), நுண்ணிய / சிறுகற்கால (microlithic), இடைக்கற்கால (Mesolithic), பெருங்கற்கால (Megalithic), புதியகற்கால (Neolithic) மனிதயெச்சங்கள் – குத்துகற்கள் (menhirs) மற்றும் நடுகற்கள் (Memorial stones), கற்கிடைகள் (Dolmen), கல்வட்டங்கள் (Cromlechs) என பலவைகையானவை நினைவுச்சின்னங்களாக (Monuments) மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில் புதைப்பு மற்றும் வழிபாடு இவற்றிற்குள்ள பகுப்பிலுள்ளதைக் கவனிக்கவேண்டும். வானிற்கும் பூமிக்கும் சம்பந்தம் உள்ளது என்ற நிலையில் குத்துக்கற்கள், நெடுகற்கள் நடப்பட்டன. பிறகு அவை நீளத்தின் பிரச்சினைக் கருதி, மேற்பகுதி கூர்மையாகவோ, கவிகையாகவோ கழிக்கப்பட்டன[5]. அந்நிலையில் மனிதனால் எண்ணத்தால் உருவத்தை அடக்க நினைக்கும்போது, அது சிறிதாகிவிடுகிறது. எண்ணிலி நீளத்தில் வானைத்தை, பேரண்டத்தையே தொட்டுவிடலாம் என்ற மனித எண்ணங்களை அவ்வாறு தடுத்து, சிறியதாகியதால்தான் உருவான அந்த கல்-உருவங்களும் அமைந்தன. இவை வழிபாட்டில் அடங்கும்.

இறப்பு-பிறப்பு குறிக்கும் குறிக்கற்கள், சிற்பங்கள்: புதைப்பு முறையில் நடுகல், இடுகுழுப்புதைப்பு (Cist), தாழிப்புதைப்பு (Urn), எனவரும் அவற்றிலும் எரியூட்டிப்பின் புதைப்பு (Post-cremational), துண்டப்புதைப்பு (Fractional burial), ஊனகற்சிப்பின் புதைப்பு (Post-Excarnation) என்று அடையாளங்காணப்படும்[6]. ஆழத்தை வைத்து அவை ஆழ்கல்லறை (Catacomb), நிலவறை (Cellar) எனவும் அறியப்படும். மேற்குறிப்பிடப்பட்ட நினைவுச் சின்னங்கள் பலவகைகளாக உருவெடுக்கும்போது அவை பள்ளிப்படை (Memorial building), ஞாபகஸ்தூபி / தூண் (Cenotaph), நிரல் / ஸ்தம்பம் / கம்பம் (Column), தூண் (Tope), சிறியஸ்தூபி (Turret), என்றாகின்றன. கோபுரம் (Tower), வெற்றித்தூண்கள் (Victory pillars / colunmns) முதலியனவும் மனிதனால் கட்டபடுகிறது. இவ்வாறே பிறப்பிற்குக் காரணமாக கற்கள் அடையாளங்காணப்படுகின்றன.

கரு-உருவாக்கம், கரு-காத்தல், கரு-வளர்தல், கர்ப்பம்-காத்தல், குழந்தைப் பெற்றெடுத்தல் முதலியவற்றிற்கும் கற்கள், வடிவங்கள், சிற்பங்கள், முதலியன உபயோகப்படுத்தப் பட்டன[7]. விதைகள், மரங்கள், பறவைகள், விலங்குகள் முதலியன அவற்றுடன் சம்பந்தப்படுத்தும் போது, உருவாகும் சின்னங்கள், கிரியைகள், சடங்குகள் முதலியனவும் வளர்கின்றன[8]. அத்தகைய பிறப்பிற்கு உதவும் கற்கள், வடிவங்கள், சிற்பங்கள் முதலியன தெய்வீகமாகக் கருதப்படும்போது, அவை இறைவடிவங்களாக ஏற்கப்பட்டன. உருவவழிபாடு மறுக்கும் மதங்களும் அத்தைகைய சின்னங்களை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தம்முள் அடக்கி தமது விசுவாசிகளைத் திருப்திப்படுத்தி வருகின்றன[9]. சில மதங்களில் பிறப்பு-இறப்புச் சின்னங்கள் கலந்து உபயோகிப்பதால், அதாவது ஒன்று அதன் தோற்றங்களை மறைக்க அல்லது உள்ள தொன்மையான மதங்களைவிட தமது இன்னும் தொன்மையானது என்று காட்டிக்கொள்ள புதிய விளக்கங்கள் கொடுக்கும்போது, அத்தகைய நேரங்களில் இறையியல் முரண்பாடுகள், பிரச்சினைகள், ஏன் போர்களே உண்டாகின்றன[10].

லிங்க வழிபாடு: இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் லிங்கவழிபாடு என்றுமே இறைவழிபாடாகத் தான் ஏற்படுத்தபட்டு, பின்பற்றப்பட்டு வந்துள்ளது, இன்றும் வருகிறது. ஜைன-பௌத்த மதங்கள் அத்தகைய சின்னங்களை தம்முள் தகவமைக்கும்பொழுது, மாற்றும்பொழுது, முந்தைய வேத-இறையியல் கோட்பாடுகளை எதிர்க்கும்போது முரண்பாடுகள் ஏற்பட்டன. சிற்பச்சாத்திரம் என்று எடுத்துக் கொள்ளும்போது, நிச்சயமாக அவை முந்தியிருந்த சிற்பநூல்களைத்தான் உபயோகித்தன[11]. அவ்வாறே கல்-தச்சர்கள், சிற்பிகள், முதலியோர் உபயாகப்படுத்தப் பட்டிருப்பார்கள். அரசியல் ரீதியில் அவர்கள் வலுப்பெற்றப்பிறகு, தமது என்று முந்தைய நூல்களை மாற்றியமைத்து இருப்பார்கள் அல்லது எழுதியிருப்பார்கள்[12]. ஆகையால்தான் சைத்தியம் மற்றும் புத்த-உருவம் உருவான ஆராய்ச்சிகளில் பற்பலக் கருத்துகள் சொல்லபடுகின்றன[13]. பல நேரங்களில், இடங்களில் சைத்தியத்திற்கும், லிங்க உருவங்களுக்கும் சிறிதே வித்தியாசங்கள், அதாவது, புத்தர் எப்படி மஹாவீரர் விக்கிரங்களினின்று வேறுபடுத்திக் காண்பிக்கப் படுகிறாரோ, அவ்வாறே அடையாளங்காணப்படுகின்றன[14]. முப்பரிமாணப் பார்வையில் அளவியலை வைத்துப் பார்த்தால் அவை எளிதாகவே அத்தகைய ஒற்றுமையைக் காட்டுகின்றன.

புதிய மதங்களில் சின்னங்கள் மாறும் அல்லது தகவமைக்கப்படும் விதம்: உருவாக்குபவர் ஒருவர் இருக்கும்போது, அவரை மற்ற வழிகளில், அல்லது அந்த உருவாக்ககும் தொழிலை அடக்கியாள யாராவது நினைத்தால், அவ்வாறே முடியும் என்ற நிலையிருந்தால், அவர் அடிபணியவேண்டியதுதான். அதாவது தக்ஷன், மயன், விசுவகர்மா, பிரம்மா போன்றவர்கள், மற்றவர்களுக்கு அடிபணிய நேரிட்டால் அவர்கள் தொழிலும் அவ்வாறே இருக்கும். இதனால்தான் பாம்பைப் படைத்தவனிடத்திலிருந்து பாம்பு எடுக்கப்படுகிறது அல்லது பாம்பை அடக்கும் நிலை காட்டப்படுகிறது. விஷ்ணு பாம்பின் மீது ஆனந்தமாக படுக்கிறார் அல்லது ஏறி ஆடுகிறார். சிவன் அதனை அணிகிறார். மஹாவீரர், புத்தர் முதலியோகளுக்கு குடைபிடித்து, ஆசனமாகின்றன. இன்று ஏசுவிற்கும் அந்த ஆசைவிடவில்லை, அதாவது கிருத்துவர்களுக்கு அத்தகைய ஆசை வந்துவிட்டது. எனவே கிருத்துவும் காவி அணிந்து, பாம்பாசனம் மீது உட்காரவைத்து விட்டார்கள்[15]. பௌத்தம் அரசியல் ரீதியில் ஆதிக்கம் கொண்டிருக்கும்போது, அவ்வாறான தகவமைப்பிகளுக்கு விஷ்ணு விக்கிரங்கள் உட்படுத்தப்பட்டிருக்கலாம். ஏனெனில், புத்தவிக்கிரகங்கள்தாம் அப்படி விஷ்ணுபோலவே நான்கு கைகளுடன் உள்ளன, பாம்பாசனத்தில் உட்கார்ந்த மாதிரியுள்ளன; விஷ்ணுவைப்போலவே சயனத்திலும் உள்ளன. விஷ்ணு சிலையிலுள்ள அலங்கார வேலைகளையெல்லாம் செதுக்கிவிட்டால், மஹாவீரர் அல்லது புத்தர் சிலை உருவாகிவிடும். மேலும் சிற்பிகளுக்கு அந்தவேலை மிகவும் எளிமையானது[16]. சைனாவில் குவான்சூய் என்ற இடத்திலிருந்த சிவன், விஷ்ணு முதலிய கோவில்கள் இடிக்கப்பட்டபோது, அதன் அஸ்திவாரங்களின்மீதுதான் புத்தவிஹாரங்கள் கட்டப்பட்டன[17]. அப்பொழுது காலைத்தூக்கி ஆடும் நடராஜார் போன்ற சிலைகள் / விக்கிரங்கள் காணவில்லை என்று அறிவித்துவிட்டர்கள்[18]. அதே மாதிரி லிங்கங்களிலிருந்து சைத்தியங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம். இங்குதான் வேலை அதிகம், அதாவது வெறும் லிங்கத்தின் புறப்பரப்பில் அலங்கார சின்னங்கள், வடிவங்கள் முதலியன உருவாக்கவேண்டும். எனவே உள்ள வடிவத்தைவிட சிறிய அளவாகத்தான் அவ்வாறான சிலைகள், சிற்பங்கள், சைத்தியங்கள் உருவாகும். மேலைநாடுகளில், கிருத்துவர்கள், உள்ள பழைய லிங்கம் போன்ற கற்கள், கல்தூண்கள் முதலியற்றின்மீதே சிலுவைகளைச் செதுக்கினர். முஹம்மது நபி கூட மெக்காவில் இருந்த 360 விக்கிரங்களை உடைத்தாலும், அரேபியர்களது வேண்டுக்கோளிற்கு இணங்கி காபா என்ற விக்கிரத்தை விட்டுவைத்தாராம்[19]. அதனை இன்றுவரை முஸ்லிம்களும் விடவில்லை. உடைக்காமல் பத்திரமாகவே வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவின் நிலை: லிங்கவழிபாடு, கல்லுருவம், நாகம்[20], மரம், திரிசூலம் முதலியற்றின் தொடர்பு[21], சிவலிங்கமாக வழிபட்டது, முதலியவை அகழ்வாய்வு ஆதாரங்கள், காலக்கணக்கியல் மற்றும் இலக்கிய அத்தாட்சிகளுடன் தொடர்பு படுத்தி ஆராயப்படுகிறது. நூற்றுக்கும் மேலாக உலகமெலாம் பல நாடுகளில் அவ்வாறு இருந்த, இருக்கின்ற அத்தகைய அத்தாட்சிகளின் புகைப்படங்களுடன் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

அகழ்வாய்வு ஆதாரங்கள்: அகழ்வாய்வு ஆதாரங்கள் உலகமெலாம் லிங்க வழிபாடு பரவியிருந்ததை எடுத்துக் காட்டுகின்றன[22]. சரித்திரகாலத்திற்கு முந்தைய ஐரோப்பியக் குத்துகற்கள் (menhirs) மற்றும் cromlechs ளில் பாம்பு வடிவம் பொறிக்கப்பட்டுள்ளன, இவையெல்லாம் லிங்கவழிபாட்டின் அறிகுறிகளே[23]. லிங்கவழிபாட்டைக் கொண்டிருந்த கஸார் என்ற நாகரிகம் முழுவதுமாக அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.

அகழ்வாய்வுகள் பல நாடுகளில் அத்தகைய லிங்க உருவ சிற்பங்கள், முழுவதுமாகவோ, பாகங்களாகவோ, கல், உலோகம் முதலியவற்றில் கிடைக்கின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் கிடைத்த “ஏகமுக லிங்கங்களை”ப் பற்றி விவரங்கள் வெளியிடப்படுகின்றன[24]. பாபிலோனியாவில் ஸியூன். எகிப்தில் சிவா / செவா / ஐஸிஸ் / ஒரிஸிஸ், ஃபிஜியில் சிவா / சிவஜ்யா, ரோமில் பிரியபஸ், சீனாவில் ஹுஹே-ஹைஃபுஹா, யூனானில் ஃபல்லஸ், தாய்லாந்தில் அகோனிஸ் / அஸ்தர்ஜெரிஸ், இஸ்ரேலில் பெல்ஃபெகோ என்று அழைக்கப்பட்டன. ஓ. ஏ. வால்[25] ஸோஹப் பள்ளத்தாக்கில் 3000 BCக்கு முன்பு விவசாயம் செய்யும் குடிமக்களால் வழிபட்டுவந்த லிங்கம் கிடைத்ததாகக் குறிப்பிடுகிறார். ஜே. எம், அல்லெக்ரோ[26], ரோமானியர் வழிபட்டுவந்த லிங்கத்தை அவர்கள் ஃப்ஸினஸ் என்றழைத்தனர் என்று குறிப்பிடுகிறார். டேவிட்ஸன்[27], லிங்கங்கள் வடக்கு ஐரோப்பாவில் அதிகமாகக் காணப்படுகின்றன. உப்பசாலாவிலுள்ள கோவிலுள்ள விக்கிரமானது லிங்கம்தான் என்று பிரெமனைச் சார்ந்த ஆடம்ஸ் என்பவர் கூறுகிறார்.

பாலியல் ரீதியிலான சிந்தனைகள், விளக்கங்கள், சிற்பங்கள் உருவான நிலை: சிவலிங்கவழிபாடு எனும்போது கவனிக்கவேண்டியது ஆண்குறி வழிபாட்டிற்கும், சிவலிங்க வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாட்டைத்தான். மேன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் பொதுவாக ஆண்குறி / பிறப்புறுப்பு வழிபாடு என்று குறிப்பிட்டதால், இன்றும் அவ்வாறே குறிப்பிடுவதால், அத்தகைய எண்ணத்திலிருந்து விடுபட்டு ஆராயவேண்டியுள்ளது. மேனாட்டவர் கல்லுருவம், நாகம்[28], மரம் முதலியற்றின் தொடர்பு[29] பற்றி ஆராயும்போது, அவர் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு நிலைகளில் அவர்கள் எண்ணங்கள் இருந்ததால், அவர்கள் அவற்றை ஆண்குறி என்று கொண்டு அவ்வாறேப் பார்த்தனர், விளக்கங்களும் கொடுத்தனர். மேனாட்டுத் தட்பவெப்பநிலை, அவ்வாறான சிந்தனைகளை வளர்த்தது. கடுங்குளிர் காலங்களில் அவர்கள் தங்களைக்காத்துக் கொள்ள மரங்களினால் ஆன வீடுகளில் வசித்தனர். அதுமட்டுமல்லாது, ஓவ்வொரு வீட்டிலும் குளிர்காய்வதற்காக நெருப்பெரியும் கூடு மற்றும் நிலவறையும் இருக்கும். மிகக்கடுங்குளிர் காலங்களில், குறிப்பாக இரவு நேரங்களில் நிலவறையில் தூங்கி சூரியன் உதித்தப்பிறகு வெளியே வருவர். எனவே மேனாட்டு ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் மற்றும் சரித்திராசியர்களின் எழுத்துகள் அத்தகைய பாலியல் விளக்கங்களுக்குள் கட்டுண்டன. சிலர் உண்மையறிந்தாலும், சித்தாந்த மன-இருக்கங்களினால் இந்தியநிலைக்கு எதிராகவே அத்தகையக் கருத்தைப் பரப்பினர். ஆகவே அத்தகைய மனநிலையின் வெளிப்பாடு அவ்வாறே இருந்தது வியப்பில்லை. உதாரணத்திற்கு ஒன்று எடுதுக் கொள்ளப்படுகிறது.

“ஸிஸ்ன தேவாஹ்” என்பது ஆண்குறியுள்ள கடவுளா அல்லது லிங்கமா? ஆண்குறிவழிபாடு இந்தியாவில் நாகரிகமற்ற எனக்கருதப்படும் காட்டுவாசிகளிடம்கூட இருந்திருக்கவில்லை[30]. மேக்டொனல் என்பவர்தாம் ரிக்வேதத்தில் இரு இடங்களில் காணப்படும் “ஸிஸ்ன தேவாஹ்” என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு “ஸிஸ்ன தேவாஹ்” என்றால் “ஆண்குறியுள்ள வணங்கும் கடவுள்” எனப்பொருள்கொண்டு வேதகாலத்திலேயே ஆண்குறிவழிபாடு இருந்தது என்று வாதித்தார். ஆனால் வேடிக்கையென்னவென்றால், இந்திரன் “ஸிஸ்ன தேவாஹ்” என்பவன் யக்ஞ நெருப்பிற்கு அருகிலே வரவிடக்கூடாது[31] என்று பணித்ததுடன், அவன் நூறு கோட்டைகளில் இருந்த புதையல்களை அடைந்தபோது அவனை (“ஸிஸ்ன தேவாஹ்” என்பவனை) கொன்றுவிடுகிறான்[32]! பிறகு மூய்ர் என்பவரும் அவ்வாறெ எழுதுகிறார்[33]. சாயனர், யக்ஸர் என்பருடைய ஆதாரத்தைச் சுட்டிக்காட்டி, “ஸிஸ்ன தேவாஹ்” என்றால், “யார் அதனுடன் தொடர்பு வைக்குக் கொண்டுள்ளார்களோ அவர்கள் அதாவது ஒழுக்கமில்லாத ஆண்கள்” என்று பொருள் தருகிறார்[34]. நிருக்தா என்ற நூலில், துர்கா என்ற விளக்கவுரை ஆசிரியரும் அதே பொருளைத்தருகிறார். இருப்பினும், இந்த விளக்கங்களுக்குத் திருப்தியடையாமல் “தேவாஹ்” என்று முடியும் வார்த்தைகளையெல்லாம் ஆய்ந்து, “வேதகால ரிஷிகளுடன் இந்த ஆண்குறிவழிபாடு இருந்தற்கான ஆதாரங்களை ஆயும்போது, அத்தகைய அத்தாட்சிகள் இல்லை” என்று முடிவிற்கு வருகிறார். இருப்பினும் பிறகு வந்தவர்கள் ஆண்குறிவழிபாடு இருந்தது என்றும் அதனை லிங்கவழிப்பாட்டுடன் தொடர்பு படுத்தியும் எழுதிவருகின்றனர்[35].

சிவன்-ருத்திரன்; சைவசித்தாந்தத்தின் தொன்மை முதலியப் பிரச்சினைகள்: சங்க இலக்கியத்தில் சிவன் மற்றும் லிங்கம் என்ற வார்த்தைகள் காணப்படுவதில்லை. ஆகவே, அத்தகைய சித்தாந்தங்கள் மற்றும் அவற்றின் உருவ அமைப்புகள், பதிவுகள் பிற்காலத்தில்தான் தோன்றிருக்கக்கூடும். இப்பிரச்சினைகளும் உருவவழிபாடு, அதாவது சிற்பங்கள் முதலிய ஆதாரங்களை வைத்து ஆராய்ந்தால் அத்தகைய பிரச்சினைகள் தீரும். ஒரு குறிப்பிட்ட மொழியில் ஒரு தத்துவம் திடீரென்றுக் காணப்படும்போது, அது இந்தியாவில் இல்லை அல்லது வேறொரு மொழியில் உள்ளதால் வெளியேயிருந்து நுழைந்தது என்ற சிந்தனைகள், வாதங்கள் இந்தியாவிற்கு வெளியேக் காணப்படும் சிவலிங்கங்களைப் பார்க்கும்போது, தவறு என்று விளங்கும். இடத்திற்கேற்றாற்போல மக்களின் பாவங்கள் அவற்றில் பிரதிபலித்திருந்தாலும் அதிலுள்ள இந்தியத் தாக்கத்தை, தொடர்பை, பிணைப்பை மறுக்கமுடியாது. ஆகவே இந்தியாவிற்கு வெளியேயுள்ள அத்தாட்சிகளே இந்தியாவுடன் இணையும்போது, இந்தியவிலுள்ள ஆதாரங்கள் அவற்றை மறுக்கும்போது வேடிக்கையாக உள்ளது.

மேலும் சிற்பிகள் மற்றும் அத்தகைய உருவங்களை மனத்தில் உருவாக்கி, அதனை கல்லில் செதுக்கி உயிர்தரும்போது, அத்தகைய எண்ணங்களில் வேறுபாடு இருந்திருக்குமேயானால் அது வெளிப்பட்டிருக்கும். ஆனால் அத்தகைய கோளாறுகள் மாற்று மதத்தினர் சிலைகளை, சிற்பங்களை, கோவில்களை மாற்றும்போதோ, இடிக்கும்போதோ, மாற்றிக் கட்டும்போதோ அவ்வாறு நேருகின்றன என்பது முன்னமே சுட்டிக் காட்டப்பட்டது. ஆகவே சித்தாந்தரீதியிலுள்ளப் போராட்டங்கள், கருத்து மோதல்கள், மரபு கண்டனங்கள்[36] இக்காலத்தில் தேவையில்லை. நம்பிக்கையுள்ள மக்களை இணைக்க, கட்டுக்கோப்புடன் வைத்திருக்க, வருங்கால சந்ததியரை நம்பிக்கையுடன் இருக்க, அத்தகைய சித்தாந்தங்களின் விளக்கங்களைக் கொடுத்தாலே போதும்.

புராணங்களும், அகழ்வாய்வு ஆதாரங்களும்: தொல்லியல் ஆராய்ச்சியும், அகழ்வாய்வும் இலக்கிய ஆதாரங்கள் இல்லாமல் புரிந்து கொள்ளமுடியாது என்று ஆராய்ச்சியாளர்கள் பலதடவை எடுத்துக்காட்டியுள்ளார்கள். விஷ்ணு, பிரம்மன் சிவனின் அடி-முடியைத்தேடிசென்ற கதை அகழ்வாழ்வு-தொல்லியில் துறைகளில் பல புதிர்களுக்கு விடைதருகிறது எனலாம். உலகத்தில் ஓரளவிற்கு வடபகுதிகளில் பிரம்மன், தென்பகுதிகளில் விஷ்ணு மற்றும் நடுப்பகுதிளில் சிவன் வழிபாடுகள் இருந்திருப்பதைக் காணாலாம். இத்தகைய பதிவுகள் சைவம் மேலோங்கியிருந்தபோது, எப்படி பிரம்மா மற்றும் விஷ்ணு சிலைகள் மாற்றப்பட்டன என்ற சூட்சுமத்தைக் காட்டுகின்றன எனலாம். பிரம்மதேசத்தில் இருந்த பிரம்மனின் சிற்பங்கள் மற்ற இடங்களில் உள்ள சிற்பங்களுடன் ஒப்பிடும்போது, எவ்வாறு அவை சிவனாக மாற்றப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது துருவங்கள் மாறுவதைப்போல இவற்றின் வழிபாடும் மாறியிருக்கலாம். ஆத்தல், அழித்தல், காத்தல் என்ற செயல்கள் தெய்வீகத்துடன் தொடர்புபடுத்தி, இயற்கை வழிபாட்டை அதனுடன் இணைத்தப்பொது, மனிதர்கள் உபயோகப்படுத்திய பொருட்களும் அவ்வாறே மாறியன, வடிவங்களைப் பெற்றன. பூகோளாரீதியில், அந்தந்த கலாச்சார, பாரம்பரிய, நாகரிகங்களில் அவ்வாறே உருவெடுத்தன. ஆகையால்தான் கற்களில்கூட இந்த மூன்று தொழிலதிபர்களுக்கு உண்டானது என்றுப் பிரிக்கப்பட்டது போலும். பிறகு விதைகள், பூக்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள் முதலிவனவெல்லாம்கூட அவர்களுக்குரித்தானது என்று தனித்தனியாக, பிரத்யேகமாக அடையளங்காணப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறே அவை அந்தந்த கடவுளர்களின் சிற்பங்களிலும் எடுத்தாளப்பட்டுள்ளதைக் காணலாம். மனிதன் என்றுமே தான் அறிந்திருந்ததலிருந்துதான் அறியாததை அறிந்து கொள்கிறான் என்பதினால், புதிய சித்தாந்தவாதிகள், மதவாதிகளும் முன்பறிந்திருந்தவற்றையே மக்களுக்கேற்றபடி மாற்றியமைத்து கொடுத்திருக்கலாம்.

முத்தொழில்கள், மூன்று தெய்வங்கள், மும்மூர்த்திகள், முத்தேவியர் பகுக்கப்பட்டது: பகுத்தல், விரித்தல், தொகுத்தல் என்ற காரியங்கள் தொடர்ந்து நடைபெறும் செயல்பாடுகள் எனலாம். இந்த லிங்கத்தத்துவத்தில் அது காணப்படுகிறது என்றால் மிகையாகாது. முதல் மூன்று நிறங்கள் சிவப்பு, மஞ்சள், நீலம் இயற்கையிலுள்ளப் பொருட்களுடன் சம்பந்தப்படுத்தியபோது, இறைத்ததுவங்களும் அவ்வாறேப் பகுக்கப்பட்டது போலும். பிறகு ஒற்றுமையேற்பட்ட பிறகு, மறுபடியும் லிங்கவழிபாட்டில் மும்மூர்த்தி வழிப்பாட்டை இணைத்திருக்கலாம். அதனால்தான், லிங்கமே மூன்று பாகங்கள் –சதுரமான அடிப்பாகம்:பிரம்மா, எண்கோண நடுப்பகுதி:விஷ்ணு, வட்டமான மேற்பாகம்:சிவன் – கொண்டதாக உருவாக்கப்படுகிறது. மேலும் நீளுருண்டையாக இருக்கும் தலைப்பகுதி பூஜாபாகம் எனப்படும் மற்றும் அதன்மீது பிரம்மசூத்ர எனப்படும் குறிப்பிட்ட கோடுகளும் காணப்படும்.  அந்த கோடுகள் இல்லையென்றால், அந்த லிங்கம் வழிபாட்டிறுப் பயன்படாது[37], என்றேல்லாம் விதிமுறைகள் ஏற்படுத்தப்படுகின்றன.

மேலும் சல = நகரக்கூடியது மற்றும் அசல = நகராதது என்ற இருவகை லிங்கங்கள் உள்ளன. ஏகமுகலிங்கம், சதுர்முகலிங்கம், பஞ்சமுகலிங்கம் என்ற பிரிவுகளும் உள்ளன. அதுமட்டுமல்லாது, நான்கு பகுதிகளில் நான்குவிதமான தெய்வங்கள் அல்லது தேவியர் காணப்படும் லிங்கங்களும் உள்ளன. சதாசிவன் என்ற பஞ்சமுக லிங்கம் – 1. தத்புருஷ, 2. அகோர, 3. வாமதேவ, 4. சதயோஜத, 5. ஈஸான – என் ஐந்து முகங்களைக் கொண்டது. ஒரு சதுர்முகலிங்கத்தில் – 1. பிராஹ்மணி, 2. வைஷ்ணவி, 3. மஹேஸ்வரி 4. இந்திராணி என நான்கு தேவியர்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு தட்சசீல லிங்கத்தில் ஒருபக்கம் மூன்றுதலைகளுடன் புத்தர் காணப்படுகிறார்! மறுபக்கத்தில் சிவன். மற்றொரு குப்தர்கால லிங்கத்திலன் நான்கு பக்கங்களில் – சிவன், விஷ்ணு, பிரம்மா மற்றும் சூரியதேவன் என்று நான்கு மூர்த்திகள் காணப்படுகின்றனர்.  இந்த முக்கியமான வேறுபாடும் ஆண்குறிவழிபாடு என்ற வாதத்தைப் பொய்யாக்குகிறது

உலகமுழுவதும் சிவன்: சிவனின் அருவுருவ வழிபாடு, லிங்க வழிபாடாக உலகம் முழுவதும் இருந்து வந்துள்ளது. ஆனால், இதனை மறைத்தும், பழித்தும் எழுதியும், பேசியும் வருவது, மேனாட்டைய ஆராய்ச்சியாளர்களின் போக்கு. லிங்க வழிபாட்டை “ஆண்குறி” வழி பாடு என்று இன்றளவிலும் அவர்கள் பேசியும்-எழுதியும் வருகின்றனர். ஆனால், உண்மையில் லிங்க வழிபாட்டிற்கும் அத்தகைய வம்சவிருத்தி வழிபாட்டிற்கும்  (fertility rites)  உள்ள வித்தியாசங்களை அவர்கள் எடுத்துக் காட்டி விவாதிப்பதில்லை. வம்சவிருத்தி வழிபாடு, சடங்குகள், பூஜாவிதானங்கள், பலி முதலிய காரியங்கள், கிரியைகள், லிங்க வழிபாட்டிலிருந்து வேறுபட்டுத் தனித்திருப்பதை காணலாம்.

லிங்க வழிபாட்டிற்கும், ஆண்குறி வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள்:  உலகமுழுவதும் பல இடங்களில் லட்சக்கணக்கில், ஏன் கோடிக்கணக்கில் நீள்-உருண்டை, சிலிண்டர் போன்ற குத்துக்கற்கள் வடிவங்களைப் பார்த்த மேனாட்டு ஆராய்ச்சியாளர்கள், அவை ஆண்குறிபோல தோற்றமளித்ததால், அதனை  Phallic என்றும் அத்தகைய வழிபாட்டை -phallic worship – என்றும் குறிப்பிட்டு எழுத ஆரம்பித்தனர் [38]. ஆனால், அத்தகைய வழிபாடும், சிவன் வழிபாடும் வேறு என்று இந்திய நூல்களைப் படித்த பிறகு மற்றும் லிங்கங்களைப் பார்த்தப் பிறகுத் தெரிந்து கொண்டனர். அதுமட்டுமல்லாது, யூத-கிருத்துவ-முகமதிய மதங்களில் மறைந்திருக்கும் லிங்கவழிபாட்டிற்கும் இந்திய லிங்க வழிபாட்டிற்கும் உள்ள வித்தியாசம் அத்தகைய இறையியல் தத்துவங்களில் தெளிவாக வெளிப்படுகிறது என்பதனையும் அறிந்து கொண்டனர். நன்றான விளைச்சலுக்கு எதிர்பார்த்து கொடுக்கும் தலைமகன் பலி (sacrifice of the first son), மனிதன் ஆண்டவனுக்கு கொடுத்தற்கான செய்யும் பலி, முதல் மனிதன் செய்த பாவத்திற்கான பிராயசித்தம்  (redemption from the original sin), குழந்தைக்காக பெண்கள் செய்யும் ஆராதனை-வழிபாடுகள்  (fertility rites)[39], ஆண்துணையன்றி குழந்தை பிறப்பு (immaculate conception), முதலியன அத்தகைய பாலியில் ரீதியிலான, மகப்பேறு கிடைக்க செய்யப்படும் சடங்குகள், பலிகள் கீழே வரலாம்[40]. மேனாட்டு மதங்களிடையே அதற்கான பல இலக்கிய, தொல் பொருள் ஆதாரங்கள் உள்ளன. ஆனால், மும்மூர்த்திகளின் வழிபாடும் – லிங்கம் பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று பாகங்களாக / தத்துவங்களாக குறிப்பிடுவதால் – இணைத்திருக்கிறது.

சிற்பிகள்-சித்தாந்திகளின் வெளிப்பாடு: உலகமெலாம் இருந்த, இன்றுமுள்ள லிங்கங்களின் உருவங்கள், அமைப்புகள் அவற்றுடன் தொடர்பு படுத்திக் காட்டியுள்ளச் சின்னங்கள் முதலியவற்றை வைத்து பார்க்கும்போது, உருவங்களிலுள்ள ஒற்றுமையை, அடிப்படையிலுள்ள இணைப்பை, மக்களின் பிணைப்பை உணரலாம். மனத்தில் ஒரு உருவத்தை நினைத்தல், அதனை கருத்துருவாக்கத்துடன் சமைத்தல், கல்லில் அவ்வாறே உருவாக்கல், பிறகு மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுதல் என்பது முதலா அல்லது, ஒரு சித்தாந்தி ஒரு அருவத்திற்கு உருகொடுத்து, அருவுருவாக்கி, அது இப்படித்தான் இருக்கவேண்டும் என்று வரையறை செய்தபிறகு தான், சிற்பி அவ்வாறு செய்யமுடியும் என்பது முதலா எனும் தர்க்கம் ஆரம்பம்-முடிவில்லாத வாதத்தில்தான் முடியும் அல்லது தொடரும். ஆகவே உள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது குறிப்பாக எடுத்துக் காட்டப்பட்ட ஒற்றுமையை எற்றுக் கொண்டு, லிங்கவழிபாடு, இந்திய நோக்கில் இறையியல்-ரீதியாக சிவலிங்க வழிபாடாக இருந்துவந்துள்ளது. அதனுடன் சம்பந்தப்படுத்தும் அடையாளங்கள், சின்னங்கள், குறியீடுகள் அதை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது. லிங்கங்கள் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருந்தாலும் அவற்றை செதுக்கியவர்கள், உருவாக்கியவர்கள் மற்றும் அதற்கான அடிப்படையைத் தந்தவர்கள், அவர்களின் மனங்களில் பதிவானதற்கான மூலங்கள் இவை இந்தியாவைத்தான் காட்டுகிறது.

மக்கள் பெருக்கத்தில் வளர்ந்து, பரந்து பல இடங்களில் வாழும் நிலையில், அவ்வாறே அந்தந்த இடங்களில் உள்ளவாறு அவர்களது வெளிப்பாடுகள் வழிபாடுகளில் தகவமைத்துக் கொண்டனர். இருப்பினும் அடிப்படையிலுள்ள ஒற்றுமை, பிணைப்பு பாரம்பரிய, கலாச்சார, காலக்கிரியமாக நடந்துவரும் பூஜைகள், விழாக்கள், சடங்குகள், தீர்த்தயாத்திரைகள் முதலியனற்றின் மூலம் வெளிப்படுகின்றது.

முடிவுரை: இன்றுள்ள நிலையில், இந்திய மக்கள் தங்களது பாரம்பரியச் சின்னங்களை பாதுகாக்கவேண்டும். எடுத்துக்காட்டப்பட்ட ஆதாரங்களினின்று எப்படி, உலகம் முழுவதும், இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் பரவியிருந்தன என்பதை அறியலாம். ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களில் அவை மறைந்து விட்டன. எஞ்சியவைதாம் அருங்காட்சியகங்களில் பார்வைக்கு உள்ளன. இந்தியாவில் உள்ளவையோ மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. மதசார்பற்ற அரசு என்ற நிலையிலும், நாத்திகம், கம்யூனிஸம் முதலிய சிதாந்தங்கள் பேசிக்கொண்டு குறிப்பிட்டக் காரணைகளை எதிர்த்து வருகிறார்கள். எனவே அந்நிலையில், மடாதிபதிகள், பெரியவர்கள், மற்றவர்கள் நம்பபக்கையாளர்களை வழிநடத்திச் செல்லவேண்டியுள்ளது. அதற்கு இந்திய சரித்திரத்தை ஆழ்ந்து படிக்கவேண்டியுள்ளது. உள்ள ஆதாரங்களை, அத்தாட்சிகளைப் போற்றிக் காப்பாற்றவேண்டியுள்ளது. உள்சமய பிரச்சினைகளை முன்வைத்து மேலும் பிரிவினைவாதிகளுக்கு, எதிரிகளுக்குத் துணை போகாமல், நம்பிக்கையாளர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க மடாதிபதிகள், பெரியவர்கள், மற்ற நலம்-விரும்பிகள் பாடுபடவேண்டும். குறிப்பாக இக்கால இளைஞர்களுக்கு அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவேண்டும்.


[1] இந்தியர்களது சரித்திரம் ஐரோப்பிய, குறிப்பாக ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டுள்ளது, இப்பொழுது பல ஆண்டுகள் ஆகியும், பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தும், நன்றாகத் தவறு என்று அறிந்த பலவற்றை இன்றும் சரித்திரம் என்று படித்து, பட்டங்கள் பெற்று, பதவிகளில் அமர்ந்து, அந்த பழங்கதைகளையே உண்மையென்று பிடித்துக் கொண்டு வாதிட்டு வருகின்றனர்.

[2] அதாவது மற்ற படிப்புகள் போன்று புதிய ஆதாரங்கள் கிடைத்தவுடன் பழையவற்றை, குறிப்பாக தவறான, பிழையான கருதுகோள்கள், சித்தாந்தங்கள் முதலியவற்றை கழித்து, உண்மைகளை வெளியிடுவதில்லை.

[3] சரித்திரம், காலக்கணக்கீட்டியல், சரித்திர நிகழ்ச்சிகளை காலக்கிரயமாகப் பார்ப்பது, சமகாலத்தைய நிகழ்வுடன் ஒப்பிட்டு, குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அவ்வாறே நிகழ்ந்திருக்குமா, நிகழ சாத்தியமா, என்றெல்லாம், தமிழ் எழுத்தாளர்கள் பார்ப்பது கிடையாது. ராஜராஜ சோழன் எப்படி கப்பல் கட்டினான், கப்பற்படையை சரியாக நடத்திக் கொண்டு தெற்காசிய நாடுகளுக்குச் சென்று போரிட்டு வென்றான், திரும்ப வந்தான் என்பதை அறிவுப்பூர்வமாக ஆராய்ச்சி செய்யாமல், இனம், மொழி, சாதி விளக்கங்கள்தாம் இன்னும் கொடுக்கப்படுகின்றன.

[4] V. G. Ramachandran, Siva Around the World, International Society for the Investigation of Ancent Civilizations, Guindy, Chennai, 1983.

இதில் சிவனைப்பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் – கலிஃபோர்னியாவில் சாஸ்தாமலை, அமெரிக்காவில் சிவன் கோவில் எனக்குறிப்பிட்டு – லெமூரியா, குமரிக்கண்டம் என்ற கோணத்தில் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

[5] இதன் பின்புலம்தான் எண்ணும் எழுத்தும் சேரும் தத்துவமும், கணிதமும் உள்ளன. பூஜ்யம் ம்குதல் எண்ணிலி வரையிலான எண்கள் உருவானது, மற்றும் வட்டத்தைச் சதுரமாகவும், சதுரத்தை வட்டமாகவும் மற்றூகின்ற ரகசியங்களும் உள்ளன. மற்ற நாகரிகங்களில் அவ்வாறு இல்லை. இதுதான் முக்கியமான வேறுபாடு ஆகும்.

[6] மணிமேகலையிலேயே இத்தகைய விவரங்கள் காணப்படுகின்ரன.

[7] John Mitchell, The Earth Spirit: Its ways, Shrines and Mysteries, AVON Booka, New York, USA, 1975,  pages.39,41,  78-79, 82-84.

[8] K. V. Ramakrishna Rao, Magic, Myth and connected Practices of the Ancient Tamils, Proceedings of the Indian History Congress, 58th Bangalore Session, 1997, pp.164-165.

[9] எப்படி கிருத்துவர்களும், முகமதியர்களும் முந்தைய நாகரிகங்களின் அத்தகைய கல்-உருவங்களை, சிற்பங்களை மாற்றின அல்லது தகவமைத்துக் கொண்டன என்பதை பின்னால் விளக்கப்பட்டுள்ளது.

[10] உருவ வழிபாட்டை வைத்துக் கொண்டே மற்றவர்களின் உருவ வழிபாட்டைக் குறை கூறுவது, ஏதோ செய்யக்கூடாததைச் செய்வதாக தூஷிப்பது, அவர்களுடைய விக்கிரங்கள், கோவில்களைத் தாக்குவது, இடிப்பது, அழிப்பன போன்ற செயல்களில் ஈடுபடுவது முதலிய காரியங்கள்.

[11] K. V. Ramakrishna Rao, Stone – Work, Art, Architecture, Style and Dating in Indian Context, a paper presented  at the ICIH -2009, New Delhi,  p.78. Full paper can be accessed and downloaded from website.

[12] P. K. Acharya, Hindu Architecture in India and Aboard, LPP, New Delhi, 1998

………….…..,  An Encyclopedia of Hindu Architecture, LPP, New Delhi, Vol.VII, 2001.

[13] A. Foucher, The Beginnings of the Buddhist Art, Paris / London, 1917.

W. W. Tarn, The Greeks in Bactria and India, pp395ff.

H. Heras, The Origin of So-called Greceo-Buddhist School of Sculpture of Gandhara, JBBRAS, Vol.12, 1936, pp.77-97.

S. N. Chakravarti, The Origin of the Buddha Image, JUPHS, Vol.XVI, 1943, pp.63-75.

P. C. Jain, Putting the Ocean in a Bowl: The Origin of the Buddha Image, in Exotic India website, 2004.

J. C. Huttington, The Origin of Buddha Image: Early Image Traditions and the Concept of Buddhadatsanapunya,  in A. K. Natain, Studuies in Buddhist Art of South Asia, New Delhi, 1985.

[14] குடையிருந்தால் மஹாவீரர், இல்லாவிட்டால் புத்தர் என்ற நிலையில் இருவரது சிலைகளும் ஒத்துப் போகின்றன.

[15] “உள்கலாச்சாரமயமாகல்” என்ற திட்டத்தில் அவர்கள், கிருத்துவ மதத்தை இந்துக்களுக்குத் தர அவ்வாறு செய்கின்றனர். சர்ச்சுகளை கோவில்போல கட்டுகிறார்கள். இந்து சாமியார்=சந்நியாசிகள் போல காவி உடுத்து, பெயர்கள் வைத்துக் கொண்டு உலா வர்கிறார்கள்.

[16] K. V. Ramakrishna Rao, The Chola-Chinese Connection, A paper to be presented during the 29th session of the South Indian History Congress to be held at Tirunelveli from January 30th to February 1, 2009.

[17] Tim Turpin, Innovation, Technology Policy and Regional Development: Evidence from China and Australia, Edward Elgar Publishing, 2002, p.89.

[18] John Guy, Tamil Merchant Guilds and the Quanzhou Trade, in The Empire of the World Maritime Quanzhou, 1000-1400, edited by Angela Schottenhammer, Brill, 2001, pp.283-305.

[19] இதைத்தவிர அல்லாவின் மகள்கள் என்று மூன்று விக்கிரங்கள் அ—ல்லத், அல்-மனத், அல்-உஜ்ஜா என்றிருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றன. இவையெல்லாம் இந்தியாவில் உள்ளன என்றறிந்துதான் முஹம்மதுகஜினி அவற்றை ஒழிக்க படையெடுத்துவந்து வந்தான்.

[20] J. H. Rivett-Carnac, Rough Notes on the Snake Symbol in India in connection with the worship of Siva, Journal of the Asiatic Society of Bengal, Calcutta, 1879.

[21] James Fergusson, Tree and Serpent worship: Illustrations of mythology and art in India and fourth century after Christ, 1873.

[22] Hyde Clarke, Serpent and Siva worship and mythology  in Central America, Africa and Asia,  Journal of Anthropological Institute, London, 1876.

[23] J. H. Rivett-Carnac, The Snake Symbol in India, Journal of the Asiatic Society of Bengal, Calcutta,

[24] Farid Khan, The Ekamukhalinga from Wanda Shahabhel Northwest Frontier, Pakistan, South Asian Studies, Volume.p, 1993, pp.87-91.

[25] Otto Augustus Wall, Sex and Sex Worship, St. Louis, C. V. Mosby & co., 1922, USA.

[26] John Marco Allegro

[27] . As Davidson mentioned in his book God and Myths’. ‘According to Adam of Bremen the statue of Freyr in the temple at Uppsala was phallic.’

[28] J. H. Rivett-Carnac, Rough Notes on the Snake Symbol in India in connection with the worship of Siva, Journal of the Asiatic Society of Bengal, Calcutta, 1879.

[29] James Fergusson, Tree and Serpent worship: Illustrations of mythology and art in India and fourth century after Christ, 1873.

[30] C. V. Narayana Ayyar,  Origin and early history of Saivism in South India, Uversty of Madras, Madras, 1936. p.49.

[31] ரிக்வேதம்.மண்டலம்,VII.21.5

[32] A. A. MacDonnell, Vedic Mythology, p.155.

[33] Muir (Trans.), Vedic Hymns, Vl. IV, p.409.

[34] Ibid.

[35] நாராயண ஐயர் அப்பொழுது ஆர். ஜி. பண்டார்கர் தமது புத்தகத்தில் Vaisnanism, Saivism, etc., p.115, எழுதியதை விமர்சித்து எடுத்துக் காட்டியுள்ளார்.

[36] சித்தாந்த மரபு, சித்தாந்த மரபு கண்டனம், சித்தாந்த மரபு கண்டன கண்டனம், ஆதினம்,

[37] Swami Harshnanda, Hindu Gods and Goddesses, Sri Ramakrishna Ashrama, Mysore, 1982,  p.84

[38] http://www.sacred-texts.com/sex/pw/pw.htm

[39] http://www.worldhistorysite.com/humansacrifice.html

[40] Frazer, Golden Bough, Penguin, 2007.

சிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு – II

பிப்ரவரி 9, 2010

சிதம்பரத்தில் 12வது உலக சைவ மாநாடு – II

திருக்கோயில்களில் தமிழ் ஒலிக்க வேண்டும்: திருப்பனந்தாள் ஆதீனம்
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST;                 Last Updated : 09 Feb 2010 01:54:45 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=194202&SectionID=129&MainSectionID=129&SEO=&..%AE%AE%E0%AF%8D

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பத்மினி,​​ டாக்டர் கபாலிமூர்த்தி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கெüரவிக்கிறார் திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் ​(வலது).
சிதம்பரம், ​​ பிப்.​ 8, 2010:​ திருக்கோயில்களில் தமிழ் ஒலிக்கவும் திருமுறைகள் சபை ஏறவும் குன்றக்குடி அடிகளார் பாடுபட்டு வருவதாக திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் தெரிவித்தார்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் பிப்ரவரி 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை 12-வது உலக சைவப் பேரவை மாநாடு நடைபெற்றது.
# மாநாட்டு நிறைவு விழாவில் திருப்பனந்தாள் ஆதீனம் காசிவாசி முத்துக்குமாரசாமி தம்பிரான் பேசியது:​ “தமிழ் திருமுறைகள் கோயில் கர்ப்பகிரகத்தில் நுழையக்கூடாது என்பது விதி அல்ல.​ எங்கெல்லாம் வடமொழி ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தமிழும் ஒலிக்கலாம்.​ அதற்காக எந்தத் தியாகத்துக்கு தயாராக இருக்க வேண்டும்.​ அனைவரும் திருமுறைகளை இல்லங்கள் தோறும் ஓதி வழிபட வேண்டும்.​ அப்போதுதான் நாடு வளம் பெறும் “, என்றார்.
# இலங்கை யாழ்ப்பாணம் நல்லை ஆதீனம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்தர் பேசியது:​ ‘யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்த ஆறுமுகநாவலரால் சிதம்பரத்தில் பாடசாலை மற்றும் அச்சுக்கூடம் தொடங்கப்பட்டது.​ இங்கு யாழ்ப்பாண மடத்துக்கு நிறைய நிலங்கள் உள்ளன.​ 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இலங்கையில் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம்.​ தற்போது அமைதி ஏற்பட்டு சமாதான சூழல் உருவாகியுள்ளது.​ இலங்கைத் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமிழ் மற்றும் சைவ சமயத்தை கைவிட்டு விடமாட்டோம்.​ இன்றும் இலங்கையில் தமிழர் இல்லங்களில் தேவாரம்,​​ திருவாசகம் மற்றும் திருமுறைகளை ஓதி வழிபட்டு வருகிறோம்.​ இலங்கையில் 4 மதங்கள் உள்ளன.​ இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு கட்டமைப்பு உள்ளது.
* இந்து மதத்துக்கு கட்டமைப்பு கிடையாது.​ கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சியில் இங்குள்ள சைவ ஆதீனங்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
* இந்தியாவிலிருந்து வரும் நாளிதழ் மற்றும் வானொலி செய்திகளில் சன்னியாசிகளை கார்ட்டூன் மூலமாகவும்,​​ பேச்சு மூலமாக கேலியாக சித்தரித்து வருவதால் இலங்கையில் உள்ள இந்து மதகுருமார்களை கேலி செய்யும் குழப்பநிலை உருவாகியுள்ளது.
* வானொலி மூலம் திருமுறைகள் தவறாக பாடப்படுகின்றன.​ இதனை இங்குள்ள ஆதீனங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்.
* இலங்கையில் உள்ள மதத் தலைவர்களுக்கு ரயில் போக்குவரத்து,​​ சாலை போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
* இலங்கையில் மாணவர்களுக்கு நடத்தப்படும் 8 பாடங்களில் ஒரு பாடம் சமயப்பாடம் ஆகும்.​ தமிழகத்திலும் அந்த நிலை வர வேண்டும்“,  என சோமசுந்தரதேசித ஞானசம்பந்தர் தெரிவித்தார்.
# விருந்தோம்பல் நின்றுவிட்டது​ குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் நிறைவுரையாற்றினார்.​ அவர் பேசியது:​ “சைவ சமயம்,​​ சமயம் மட்டுமல்ல,​​ தத்துவம் மட்டுமல்ல.​ அது வாழ்க்கை முறை.​ அனைத்து வல்லமைகளும் கொண்டது.​ இன்றைய அறிவியல் மற்றும் பகுத்தறிவு குறித்து உலகளவில் விடை சொல்லிக் கொண்டு வருகிறது சைவ சமயம்.​ சட்டத்தின் வழியாக ஏற்படுத்த முடியாத மனமாற்றத்தை சைவத்தின் வழியாக ஏற்படுத்த முடியும் என அப்பர் பெருமான் பாடியுள்ளார்.​ சமயங்கள் மானுடத்தை நெறிபடுத்துகின்றன.​ தற்போது சமயத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாததால் இல்லங்களில் தங்கவைத்து நடைபெறும் விருந்தோம்பல் நின்று விட்டது.
* குடும்பங்கள் வர்த்தக நிறுவனங்களாக மாறிவிட்டன.
* இதனால் தங்கும் விடுதிகள்,​​ உணவு விடுதிகள் பெருகிவிட்டன.
* குடும்ப வாழ்க்கை உடைந்து சிதறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
* திருமணங்கள் சொர்க்கத்தில் இல்லை,​​ ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.
* பெரியபுராணம் காட்டிய இல்லறத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்“,  என்றார் குன்றக்குடி அடிகளார்.
பழ.தரும. ​ ஆறுமுகம் வரவேற்றார்.​ பேரூர் சாந்தலிங்கராமசாமி அடிகளார் தொடக்கவுரையாற்றினார்.​ திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார்.​ உலக சைவப் பேரவை இந்தியத் தூதர் டாக்டர் பத்மினிகபாலிமூர்த்தி தொகுத்து வழங்கினார்.
கல்வி நிறுவனங்களில் பண்ணிசையைப் பாடமாக்க கோரிக்கை
First Published : 09 Feb 2010 12:00:00 AM IST

சிதம்பரம், ​​ பிப்.​ 8:​ கல்வி நிறுவனங்களில் பண்ணிசையைப் பாடமாக அமைத்து தமிழிசையை வளர்க்க தமிழக அரசை வலியுறுத்தி சிதம்பரத்தில் நடைபெற்ற 12-வது உலக சைவப் பேரவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: உலகச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெறுவதை உலக சைவப் பேரவை வரவேற்கிறது.

* திருமுறைகளை பண் மாற்றி பாடக்கூடாது;​ முறையாகப் பாட வேண்டும்.​ பாடுவோர் சீலமும்,​​ கோலமும் உடையவராகத்தான் இருத்தல் வேண்டும்.​ தமிழகத்தில் அவரவர் சமயங்களை அவரவர் மேற்கொண்டு ஒழுகுவது சைவ சமய சாஸ்திர உடன்பாடாகும்.

* மதமாற்றம் சைவத்தில் அன்று முதல் இன்றுவரை கிடையாது.​ எனவே அவரவர் மதத்தை போற்றி வளர்ப்பதற்கும்,​​ அவரவர் வளர்வதற்கும் மத்திய அரசு ஆதரவு அளித்து நெறிப்படுத்த வேண்டும்.

* சமய அடிப்படைகளை சைவர்கள் தெரிந்து கொள்ள சைவ ஆதீனங்களும்,​​ மடாதிபதிகளும் முயற்சியும்,​​ ஆதரவும் அளிக்க வேண்டும்.

* பூஜைகள் இன்றி உள்ள திருக்கோயில்களில் அப்பகுதியில் வாழும் மக்கள் தாங்கள் அறிந்த மொழியின் வழியில் வழிபாடு செய்யும் நிலை உருவாக வேண்டும்.

* ஓதுவாமூர்த்திகள் இல்லா திருக்கோயில்களில் சேவை மனப்பான்மையில் திருமுறைப் பயிற்சி பெற்ற இளைஞர்களை திருமுறைகளை ஓத முதியோர் ஊக்குவிக்க வேண்டும்.

* ஆதீனங்கள் அவரவர் மரபுகளை பேணிக் காத்தல் வேண்டும்.

*  சிக்கல்கள் ஏற்படும் போது ஒன்றுகூடிக் கலந்தாய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும்