இந்து மடாதிபதிகளும் முஸ்லிம்களும் – I

இந்து மடாதிபதிகளும் முஸ்லிம்களும் – I

© வேதபிரகாஷ்

 

இந்து மடாதிபதிகளை எதிர்க்கும் முஸ்லிம்கள்: சமீபத்தில் சில குறிப்பிட்ட தமிழ் பத்திரிக்கைகள் மற்றும் இணைதளங்களில் வெளியிடப்படும் செய்திகள் முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு, எதிர்ப்புத்தன்மை, தாக்கும்-மனப்பாங்குகளுடன் மடாதிபதிகளுடம் பொருதும் நோக்குப் புலப்படுகிறது[1]. ஆனால் இந்துக்கள் இதனுடைய விளைவுகளை அறியாமல் இருக்கின்றனர் எனலாம். ஏனெனில் மடாதிபதிகளுக்கு இணையாக முஸ்லிம்களின் மடாதிபதிகள் அவ்வாறு எதிர்கொண்டு வருவதில்லை. மாறாக அடிப்படைவாதம் மிக்க பிரச்சாரகர்கள், அரசியல்வாதிகள் மற்ற கூட்டங்கள் ஏதாவது ஒரு அடையாளத்தின் கீழ் எதிர்ப்புத் தெரிவித்து ஆக்கிரமிப்பு மற்றும் எதிர்க்கும் போக்குடன் பாய்ந்து சென்று, அமைதியுடன் இருக்கும் இந்து மடாதிபதிகளை மிரட்டுகின்ற தோரணையில் செயல்படுவதாகத் தெரிகின்றது.

Madurai Adhinam threatened by the Mohammedans several times.1

மதுரை ஆதீனத்தின் மடத்தை முற்றுகையிடுவோம்!: இப்படி மிரட்டி, உருட்டி அச்சமூட்டி, மடத்தலைவர்களை தாக்கும் தோரணையில் உள்ளபோது, போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தனர்? ஏன் மடத்தவருக்கு ஒன்றும் புரியவில்லையா? இந்துமதம், இந்துமத கடவுளர், இந்து புனித நூல்கள், முதலியவை தொடர்ந்துத் தாக்கப் படுகின்றனவே. எந்த மதசார்புள்ள-மதசார்பற்ற இந்தியர்கள் அப்பொழுது அவர்களை, அவர்களது மடங்களை முற்றுகையிடுவோம் என்று கிளம்பவில்லையே? கிருத்துவர்களும்[2], முகமதியரும் வண்டி-வண்டியாக அத்தகைய அவதூறுகளைக் கொட்டியுள்ளனரே? அப்பொழுது பொறுப்பான, பண்புள்ள, அன்புள்ள, சகோதரத்துவமுள்ள, நேசமுள்ள, அமைதியைப் பின்பற்றும் எந்த கிருத்துவனோ, முஸ்லீமோ தட்டிக்கேட்கவில்லையே, தடுக்கவில்லையே? ஏன்?

Madurai Adhinam threatened by the Mohammedans several times.2

முஸ்லிம் மேடைகளில் தமிழ்-திராவிட பாரம்பரிய பேச்சுகள்: முஸ்லிம்கள் திராவிடத்தலைவர்களை, நாத்திக அரசியல்வாதிகளை, குறிப்பாக இந்து-விரோதி சித்தாந்திகளை தமது மத-விழாக்களிலிருந்து, கருத்தரங்கங்கள் முதலியவற்றிற்கு வரை வரவழைத்துப் பேச வைப்பது பாரம்பரியமாக உள்ளது. இப்பேச்சாளர்களின் சொல்லாடல்கள், வார்த்தைப் பிரயோகங்கள், உயர்வு நவிர்ச்சியில் பேசும் விதம், இரட்டை அர்த்தங்களில் கொக்கரிக்கும் அல்லது ஏளனம் செய்யும் விதம் எல்லோரும் நன்றாக அறிந்ததே[3]. மேலும் இவர்களின் உண்மையான மதசித்தாந்தத்தின்படி இந்த திராவிடத்தலைவர்கள், நாத்திக அரசியல்வாதிகள் மற்ற பேச்சாளிகள் எல்லோரும் காஃபிகளே. அவர்களுடன் சரிசமமாக உட்காருவது, பேசுவது, உறவாடுவதே இஸ்லாமிற்கு எதிரானதே! இருப்பினும் இந்துவிரோதம், இந்து-துரோகம், இந்து-எதிர்ப்பு உள்ளதால் வீரப்பாண்டியன்-மாலிக்காஃபூர்/அலாவுத்தீன் கில்ஜி கூட்டணி போல சேர்ந்து கொண்டு சொந்த மண்ணிலிலேயே உப்பையுண்டு வளர்ந்த துரோகம் பேசுகிறது, பகைமை பாராட்டுகிறது, உடன் பிறவா சகோதரர்கள், ரத்தத்தின் ரத்தங்களை எதிர்க்கின்றது.

Madurai Adhinam threatened by the Mohammedans several times.3

கடவுளில்லை என்பரைக் கட்டிப்பிடிப்பது, கடவுள் உள்ளார் என்பவருடன் பகைமை பாராட்டுவது என்ன? திராவிடர்கள், திராவிட நாத்திகர்கள், பகுத்தறிவு பகலவன் ராமசாமி நாயக்கர் வழிவந்துள்ள கருணாநிதி, வீரமணி முதலியோர் “கடவுள் இல்லை” என்று கொக்கரிக்கும்போது, எப்படி முஸ்லிம்கள் அவர்களைக் கட்டிப் பிடித்து சரசமாடுகின்றனர்? இப்பொழுது தானே “கடவுள்” என்றவகையில் கருணாநிதி செயல்பட்டு வருகிறார், பேசுகிறார், விளம்பரங்கள் செய்து கொள்கிறார், கவிக்கோக்கள்-கவிப்பேரரசுகளை வைத்துக் கொண்டு பிரகடனம் செய்கிறார். அதாவது அல்லா இருக்கும் போதே தான்தான் கடவுள் என்று பிரகடனம் செய்து வருகிறார்! பிறகு ஏன் அவரை எதிர்க்கவில்லை? ஆனால் கடவுள் உள்ளார் எனும் நம்பிக்கையாளர்களை ஏன் எதிர்க்கவேண்டும்? நாத்திகர்களே “காஃபிர்கள்” என்ற நிலையிலினின்று விலக்குக் கொடுத்து ஒட்டிக்கொள்ளும் பட்சத்தில், ஏன் “ஆத்திகர்கள்”, “காஃபிர்கள்” நிலையிலேயே வைக்கப்படுகிறார்கள்? இஸ்லாத்திற்கு எதிராக இன்னொரு இஸ்லாத்தை இந்தியாவில்-தமிழகத்தில் உருவாக்கப் பார்க்கிறார்களா?

Madurai Adhinam threatened by the Mohammedans several times.4

முகமதிய தசாவதாரம், அல்லா உபநிஷதம் முதலியவற்றை மறந்து விட்டார்களா? இன்று வேதங்கள், பவிஷ்ய புராணம் எல்லாம் முகமதுவின் வரவை எடுத்துரைக்கின்றன என்று பேசுகின்றனர். பிறகு ஏன் முகமதிய தசாவதாரம், அல்லா உபநிஷதம் முதலியவற்றை மறந்து விட்டார்கள்? அக்பரும் “தீன் இலாஹி” ஏற்படுத்தி, தானே கடவுள் என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது!

Madurai Adhinam eating gruel with te Mohammedans

ஸ்ரீரவிசங்கரும், தருமபுர ஆதீனமும்: ஸ்ரீரவிசங்கர் என்பவர் ஜகீர் நாயக்குடன் வாதம் புரிந்தபோது, “எல்லாமதங்களும் ஒன்று” என்று பரந்த மனபான்மையுடன் வாதிட்டபோது, பின்னவர் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையேப் பிடித்துக் கொண்டு அவ்வாறு முடியாது என்று வாதித்தார்[4]. குரானுடன் எதையும் ஒப்பிடமுடியாது என்று மிரட்டி குரானை கையில் கொடுத்து “இஸ்லத்தை ஏற்றுக் கொள்” என்ற முறையில் அதட்டல் முறையில் விதண்டாவாதம் செய்தார். அந்நிலையில், “ஓகே, அவ்வாறே வைத்துக் கொள்”, என்றதை அவர் தோற்றுவிட்டனர் என்று பிரச்சாரம் செய்துவருகின்றனர்[5]. அதே போக்குதான் இங்கும், இந்த தருமபுர ஆதீன விஷயத்தில் தெரிகின்றது. முஸ்லிம்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது நன்றாகவே தெரிறது. உண்மையென்னவென்றால் இந்தியர்களுக்கு, இந்துக்களுக்கு, இந்த இந்து மடாதிகளுக்கு “இஸ்லாம்” என்ற “அதிப்படைவாத இஸ்லாத்தை”ப் பற்றி ஒன்றும் தெரியாது. “சர்வ மத சமபாவம்” என்ற நோக்கில் எல்லா மதங்களும் ஒன்றே, எல்லா கடவுளர்களும் ஒன்றே, எல்லா மதநூல்களும் ஒன்றே என்ற விதத்தில் பேசிக் கொண்டிருப்பார்கள். அவ்வாறே “ஈஸ்வர அல்லா தேரோ நாம், சப்கோ சன்மதி தே பகவான்” என்று பாடிக்கொண்டிருப்பார்கள் ஆகவே அத்தகைய நோக்கை-போக்கை முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர் என்பதனை குறிப்பாக அறிந்து கொள்ளும் திறனும் அவர்களுக்கு இல்லை[6]. ஏனெனில் இந்தியர்கள் அவ்வாறு வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

நக்கிரனில் வந்த செய்தி!

தருமபுர ஆதினத்தின் “சரண்டரும்”, “ஒப்புதல் வாக்குமூலமும்”: எதிர்பார்த்தபடியே “நக்கீரத்தனம்” கொண்ட விஷமிகள் ‘சண்டரான தருமபுர ஆதினம்” என்று பிரச்சார பீரங்கிகளை முழக்க ஆரம்பித்துவிட்டன! முஸ்லிம்களும் தமது இணைதளங்ககளில் குண்டு வெடிக்கத் தொடங்கிவிட்டனர்! ஆமாம், ஜிஹாத் தொடங்கிவிட்டதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றனர். சிதம்பரம் ஜிஹாத் என்று குறிப்பிட்டதையும் எதிர்க்கின்றனர். சரி, இதன் உண்மைதான் என்ன?

தருமபுர ஆதினம் என்ன ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்? தருமபுர ஆதீனம் சரண்டர்,..என்றெல்லாம் வெளியிட்ட “நக்கீரன்” மற்ற விவரங்களைப் பார்ப்போம்: இதோ அந்த தருமபுர ஆதீனம் கொடுத்ததாக வெளியிடப்பட்டுள்ள கடிதம்!

பெறுநர்:-

 

பொறுப்பாளர் பெருமக்கள்

தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமா அத்

—-

திருப்பெருந்திரு

 

மதுரை ஆதினம்

குருமகாசன்னிதானம்

தலைமை அலுவலகம்

மதுரை – 625 001

எச்சமயமாக இருந்தாலும் அனைவரும் கடவுளின் குழந்தைகளே!

 

மதுரை ஆதீனம்

நாம் குருமகாசன்னிதானமாக பட்டம் ஏற்ற காலத்தில் இருந்தே இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் சமயங்களைப் பற்றிய தத்துவங்களை எல்லாம் எடுத்துச் சொல்லி ஒற்றுமைப் படுத்தி எச்சமயமாக இருந்தாலும் அனைவரும்  ஒரே கடவுளின் பிள்ளைகளாகவே வாழ்ந்து வருகிறோம். மதங்களால்  வேறுபட்டாலும் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகளே, என்பதையே நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அது மாத்திரமல்லாமல், நாம் கிறிஸ்தவ, இஸ்லாம் சமயங்களின் மத நல்லிணக்க விழாக்களில் கலந்து கொண்டு மத ஒற்றுமை குறித்து வலியுறித்தி வருகிறோம். எனவே, நம்மிடத்தில் ஒற்றுமைப்பட்ட வளம் வேண்டும் என்பதுதான் என்விருப்பம். திருச்சியில் நடைப்பெற்ற சங்கராச்சாரியார் பிறந்த தின விழாவில் நாம் உரையாற்றியபோது, யார் மனதையும், எந்த மதத்தையும் குறைவாக பேசவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோருக்கும் ஆசிர்வாதம்.

மேலும், நாம் உரையாற்றியதில் இஸ்லாமிய சகோதர்களின் மனம் புண்பட்டிருந்தால், எமது மனமும் புண்பட்டதாகவே உணருகிறோம். உலகில் மனிதானகப் பிறந்த எவரும் இதற்கு முன்பும் இனியும் என்றும் இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு ஈடாக முடியாது. இவ்வுலகத்தில் எவரும் நாயகம் அவர்களின் அவதாரமும் ஆகமுடியாது என்பதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்பதனை இஸ்லாமிய சகோதர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்!

Allah Upanishad, forgery

இதில் காணப்படும் புதிர்கள்: இந்த கடிதத்தைப் பற்றி பல வினாக்கள் எழுகின்றன.

  1. கோடுபோட்ட நோட்டுப்புத்தக பக்கத்தில் அக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
  2. முதல் பத்தி ஒரு கையெழுத்தில் உள்ளது.
  3. இரண்டாம் பத்தி வேறொரு கையெழுத்தில் உள்ளது.
  4. எங்குமே மடாதிபதி கையெழுத்திட்டதாக இல்லை.
  5. மேலும் அக்கடிதம் அறிவுரைக் கூறுவதாக உள்ளது.
  6. அதற்கும் மேலாக அக்கடித்தத்தில் காணப்படுவது வேடிக்கையாக உள்ளது.
  7. உலகில் மனிதானகப் பிறந்த எவரும் இதற்கு முன்பும் இனியும் என்றும் இறைத்தூதர் நபிகள் நாயகத்திற்கு ஈடாக முடியாது” – அப்படியென்றால், முன்னமுள்ளவர்களின் நிலை மறுக்கப்படுகிறது. இதனை உண்மையான முஸ்லிம்கள் ஏற்பார்களா?
  8. இவ்வுலகத்தில் எவரும் நாயகம் அவர்களின் அவதாரமும் ஆகமுடியாது” – அப்படியென்றால், “நாயகம் அவர்களின் அவதாரம்” உள்ளதை ஏற்றுக் கொள்கிறார்களா? பிறகு எதற்கு இந்த வம்பெல்லாம்?
  9. மடாதிபதி சொல்கிறார்: “அனைவரும்  ஒரே கடவுளின் பிள்ளைகளாகவே வாழ்ந்து வருகிறோம்”, மயிலை சின்னப்பா, சாம் ஜெயபால், கே. ராபின், ஜைனுலாபுதீன் முதலியோர் இதனை ஏற்றுக் கொள்கிறார்களா இல்லையா?.

10.  மேலே, “திருச்சியில் நடைப்பெற்ற சங்கராச்சாரியார் பிறந்த தின விழாவில் நாம் உரையாற்றியபோது, யார் மனதையும், எந்த மதத்தையும் குறைவாக பேசவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”, என்றுதான் உள்ளது.

11.  “எல்லோருக்கும் ஆசிர்வாதம்” என்கிறார், ஏற்றுக் கொள்வார்களா?.

12.  “ஏசுவே சிலுவையில் மரிக்கவில்லை”, Crucifixuon பொய் என்கின்றனர் முஸ்லிம்கள்[7]. கிருத்துவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

ஆகவே, இந்திய நாட்டில் “செக்யூலரிஸம்” பேசி, இவ்வாறு அனைவரும் கூடி இந்துக்களுக்கு எதிராக செயல்படுவதுதான் தெரிகிறது.

© வேதபிரகாஷ்

08-01-2010


[1] குறிப்பாக இவ்விஷயத்தில் “நக்கீரன்”. இவ்வாறு சிண்டு முடித்துவிடும் வேலையை செய்துகொண்டே இந்துமதம், ஆன்மீகம் என்றெல்லாம் வேறு சஞ்சிகைகள், புத்தகங்கள், தகடுகள் முதலியவற்றை வெளியிட்டு இந்துக்களை ஏமாற்றுகிறது. இதன் புத்தகங்களை விற்பது “திக” என்பதிலிருந்து இதன் “நக்கீரத்தனம்” நன்றாகவே தெரிறது!

 

[2] வேண்டுமானால் பட்டியல் போட்டுத்தரப்படும், காட்டப்படும். ஆராய்ச்சி என்ற போர்வையிலேயே அத்தகைய அவதூறுகளைப் பதிவு செய்துள்ளார்கள்.

[3] அப்பொழுது ஏன் இவ்வாறு ஒப்பீடு செய்கிறிர்கள் என்று கஞ்சி குடித்த நாத்திக மடாதிபதிகளைக் கேட்கவில்லையே?

[4] அபூ உமர், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் Vs Dr. ஜாகிர் நாயக் (Debate), முழுவிவரங்களை இங்கே பார்க்கவும்:

http://www.islamkalvi.com/portal/?p=163

[5] ஜாகிர் நாயக்கைப் பற்றிய மாற்றுக் கருத்துகளை இங்ஏ பார்க்கலாம்:

Dr.ஜாகிர் நாயக் அவர்களின் புளுகு மூட்டை அம்பலம் (வீடியோ ஆதாரத்துடன்)

Dr.ஜாகிர் நாயக் இவரைத் தெரியாதவர்கள் இஸ்லாமிய வட்டாரத்தில் யாரும் இருக்க முடியாது.அது போலவே மற்ற மதங்களை சேர்ந்தவர்களும் இவரை நன்கு அறிந்து இருப்பார்கள்.அவ்வளவு அருமையான விவாத திறமை உடையவர்.இஸ்லாமை காப்பாற்ற எந்த ஒரு பொய்யையும் துணிந்து சொல்லக்கூடியவர்.எதிர் அணியில் இவரோடு விவாதம் செய்யும் நபர்களின் பலவீனங்களை நொடிப்பொழுதில் பயன்படுத்தி அவர்களை வீழ்த்தி மகிழ்ச்சி அடைபவர்.அதற்காக எந்த ஒரு தவறான தகவலையும் தரக்கூடியவர்.ஏன் குரான்,ஹாதீஸ் வசனங்களை கூட  இவர் விரும்பியபடி வளைத்து விஞ்ஞான பூர்வமாக ஆக்கி அர்த்தம் சொல்லக்கூடியவர்.இவ்வளவு புகழுக்குரிய இவருடைய முகமூடிகள் அநேக தரம் கிழிக்கப்பட்டு வருகிறது.

http://sathyavaan.blogspot.com/2008/07/dr.html

[6] “எல்லாமே கடவுள்தாம்” என்பதற்கும் “எல்லாமே கடவுளையுடையது” என்பதற்கும் வித்தியாசம் காண்கிறார்களாம். பிறகெப்படி, கடவுள் தன்னுடைய உருவத்தில் மனிதனைப் படைத்தான்?

[7] இதைப் பற்றி பல புத்தகங்கள் உள்ளன. ஏன் குரான் தான் அத்தாட்சி என்று முஸ்லிம்கள் கூறுகின்றனர். கிருத்துவர்கள் தமது பைபிள் சொலவதை விடுத்து, ஏற்றுக்கொள்வார்களா?

3 பதில்கள் to “இந்து மடாதிபதிகளும் முஸ்லிம்களும் – I”

  1. இஸ்லாம்-இந்தியா Says:

    […] பொருதும் நோக்குப் புலப்படுகிறது[1]. ஆனால் இந்துக்கள் இதனுடைய விளைவுகளை […]

  2. Brahmallahchrist Says:

    The Mutt-heads should exercise their powers and live accordingly.

    They should not live expecting favours from the rulers, that too, atheidsts like Karu. that is why they are failing utterly and also making their believing followers to fail.

    Therefore, they should change their attitude to protect their interests and properties.

    This Ravisankar is for something – they say, he is trying for Noble prize.

    The otherday, he was sitting with Christian bishops sat a Catholic Bishop conference.

    And he is not ashamed, bothered or woriied about his ‘defeat” or “bungling” with Zakir Naick, the trickster!

பின்னூட்டமொன்றை இடுக